Wednesday, May 31, 2017

இவர்களின் வீர, மான, இனவுணர்வு ....

இலங்கையில் பெரும் வெள்ளம், தென்னிலங்கையில் வெள்ள அழிவு என்றால், இங்கும் சிலர் கூச்சலிடுகின்றனர்


2009ல் என் இனம் அழியும் பொழுது சிங்களன் அமைதி காத்தான், 2017ல் இறைவனின் தண்டனையில் சிங்களம் அழியும் பொழுது நாங்கள் அமைதி காப்போம்" என வீரமுழக்கம் இடுகின்றனர்


இங்கு குடிக்க நீர் இல்லை என்றாலும் வீரமுழக்கம் எப்படி பார்த்தீர்களா?




தென்னிலங்கையில் தமிழர்கள் இல்லை என சொன்னது யார்? அங்கும் தமிழர்கள் உண்டு, இந்த வெள்ளத்தில் தமிழர்களும் பாதிக்கபட்டிருக்கின்றார்கள்


அவர்களை சாவுங்கள் என விட்டுவிடலாமா?


ஒரு மண்ணும் தெரியாது, இலங்கை அமைப்பும், மக்களின் வாழ்வும் புரியாது, சும்மா சீமான் சொன்னவுடன் கத்திவிட வேண்டும் என்பது இவர்களின் வீர, மான, இனவுணர்வு



No comments:

Post a Comment