ரஜினிக்கு பாதுகாப்ப்உ கேட்ட டிஜிபி அலுவலகத்தில் இந்து அமைப்புக்கள் மனு
முன்பு குஷ்பூவிற்கும் ரஜினிக்கு போன்றே அமைப்புக்களால் கடுமையான அச்சுறுத்தல் இருந்தது, ஒரு பாதுகாப்பும் அளிக்கபடவில்லை, வற்புறுத்தியும் வழங்கபடவில்லை
அச்சுறுத்தல், வீட்டில் கல் எறிதல் என கடும் அராஜகம் நடந்த பொழுதும் பாதுகாப்பு கொடுக்கபடவில்லை
இப்பொழுது ரஜினிக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்கின்றார்கள்
ரஜினி இதுவரை எந்த அரசியல் பொறுப்பிலும் இல்லை ஆனால் குஷ்பூ காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்பது கவனத்திற்குரியது
ரஜினி மக்கள் அபிமானம் கொண்டவர் என்றால், அவரை விட பல மடங்கு மக்கள் அபிமானமிக்கவர் குஷ்பூ
ரஜினிக்கு பாதுகாப்பு கொடுக்கும் முன், அவருக்கு முன்பே மிரட்டபட்ட குஷ்பூவிற்கும் பாதுகாப்பு கொடுக்கபட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்...
மிஸ்டர் ரஜினி
இந்த சைமன், வீரலட்சுமி, பாரதிராஜா எல்லாம் குஷ்பூவிடம் மோதிவிட்டு பின்வாங்கிய கும்பல்தான்
முடிந்தமட்டும் அவரை மிரட்டி பார்த்தார்கள், விரட்ட பார்த்தார்கள் ஆனால் முடியவில்லை, குஷ்பூவின் தைரியம் முன் தோற்றார்கள்
அவர் திமுகவில் இருந்தபொழுதும் மிரட்டல்கள் பல வடிவில் வந்தன, உட்கட்சி தகறாறும் உண்டு
ஆனாலும் அவரை அசைக்க முடியவில்லை , நான் இந்திய குடிமகள் என மிக தைரியமாக, "நானும் தமிழச்சி" என மிக கம்பீரமாக நின்று சாதித்து இன்று அகில இந்திய கட்சியின் செய்தி தொடர்பாளராகிவிட்டார்.
அவரை இனி இவர்கள் என்ன செய்துவிட முடியும்? நெருங்கி பார்க்க முடியுமா?
உங்களுக்கு முன் இருக்கும் மிரட்டல்களை எல்லாம் கடந்து வர, தமிழகத்தில் மிகபெரிய உதாரணம் அந்த குஷ்பூ
அவரை வழிகாட்டியாக கொள்வீரானால் உங்கள் அரசியல் வாழ்வு நிச்சயம் ஜொலிக்கும்
No comments:
Post a Comment