Monday, May 29, 2017

தண்ணீர்.. தண்ணீர்... தண்ணீர்....




No automatic alt text available.மலையாளி தண்ணீர் தரவில்லை, கன்னடன் தண்ணீர் தரவில்லை, தெலுங்கன் கொல்கின்றான் ஆகவே இனி தமிழனுக்கு விடுதலை வேண்டும், தனிதமிழ்நாடு வேண்டும் என கத்தியவன் எல்லாம், மாட்டுகறி இல்லை என்பதற்காக
நாங்கள் திராவிடர்கள் தனிநாடு வேண்டும் என கொடிபிடிக்கின்றான்


முன்பு நான் திராவிடன் இல்லை மான தமிழன் என்றவனெல்லாம் இதோ நான் திராவிடன் ஆரியம் ஒழிக என கிளம்பிவிட்டான்





மாட்டுகறிக்கு எல்லாமுமா கட்சி மாறுவான்? அட பரிதாபமே,

இந்த கறிக்காக அந்த எதிரி மலையாளி, காவேரி எதிரி கன்னடனிமுமா உறவாட முடியும்? காவேரி நீருக்காக செத்த விக்னேஷின் ஆன்மா மன்னிக்குமா?

இந்தியாவில் மாட்டுகறி இல்லை திராவிட நாட்டில் கிடைக்கும் என்றால் இதோ பெட்டி கட்டி கிளம்புகின்றார்கள்

மாட்டுகறிக்காக என்னவெல்லாம் செய்ய தொடங்கிவிட்டான் மான தமிழன், மாட்டுகறிகாக இவனுக்கு தனி திராவிட நாடு வேண்டுமாம்.

ஒவ்வொரு தமிழனுக்கும் ஒவ்வொரு ஆசை

சிலருக்கு ஈழ ஆசை, சிலருக்கு தனிதமிழ்நாடு ஆசை, இதோ சிலருக்கு மாட்டுகறிக்காக திராவிட நாடு ஆசை

அங்கிள் சைமன் மானம் கெட்ட, ஈன, சொரணை கெட்ட இனம் என அடிக்கடி சொல்வார், ஆனால் கறிக்கு ஆசைபடும் கறிதமிழன் என்றொருவர் இருப்பதை மறந்துவிட்டார் போல‌

அங்கிள் சைமன் இனி உங்களின் தமிழ் பிரிவுகளில் இந்த கறிதமிழனையும் சேர்த்து கொள்ளவும்

பாருங்கள் சைமன், நீங்கள் தமிழருக்கு இனமான உணர்வூட்டி அவர்களை தமிழ்பிள்ளைகளாக வளர்க்க நினைத்தால் அவர்கள் கன்னடனோடும், மலையாளியோடும் சேர்ந்து மாட்டுகறிக்காக இனம் மாறி பழகும் பிள்ளைகளாக இருக்கின்றார்கள்

அதனால் இந்த தமிழ் பிள்ளைகளுக்கு மாட்டுகறி கொடுத்து, அவர்கள் பக்கம் செல்லாமல் இங்கே தமிழனாக இருக்குமாறு பார்த்துகொள்ளும் பெரும் பொறுப்பு உங்களுக்கு வந்திருக்கின்றது

கவனியுங்கள் அங்கிள், தண்ணி கிடைக்காவிட்டால் நான் தமிழன் என உங்களோடு நின்றவன் எல்லாம் இப்பொழுது மாட்டுகறி கிடைக்காமல் திராவிடனாகின்றான்

விரைவில் இன்னொன்று ஏதாவது, அதாவது அரபு பெட்ரோலோ அல்லது வேறு இறக்குமதியோ கிடைக்காவிட்டால் இந்தியனாகிவிடுவான்

அட அவ்வளவு ஏன்? நாளை பாலுக்கும் தடை வந்து, சிங்களன் கிரிபத் எனப்படும் பால்சோறு கொடுக்கின்றான் என்றால் இவன் முதல் ஆளாக, தென்னகத்து இனம் வாழ்க என சொல்லி சிங்களனிடமும் உறவாடும் ஆபத்து இருக்கின்றது

அதற்குள் முந்தி சென்று இந்த நாதியற்ற இனத்தை காப்பாற்றுங்கள்....

மாட்டுகறிகாக தவிக்கும் இந்த இனத்திற்கு விருந்து வைத்து அவர்களை தமிழனாக இருக்க வையுங்கள், இல்லை திராவிடனாகி தொலைத்துவிடுவான் அய்யா....












மேட்டூர் அணையினை காயவிட்டதும், காவேரியினை பாலைவனமாக்கியதும் பற்றி ஒருவனும்
மூச்விடவில்லை


ஆனால் பழனிச்சாமி அதில் தூர்வாரிவிட்டாராம் பெரும் சாதனையாக அடிப்பொடிகள் சொல்லிகொண்டிருக்கின்றன‌





காய்ந்த காவேரியில் நீரா அள்ள முடியும்? மணல்தான் அள்ளமுடியும், அப்படி மணல் தெரிய காயவிட்டதுயார்? இவர்கள்தான்

காவேரி முழுக்க மண் அள்ளி விற்றுவிட்டு, இப்பொழுது மேட்டூர் அணை களிமண்ணையும் எடுக்க வந்துவிட்டார்கள், அதுதான் உண்மை

இதில் என்ன சாதனை????










 


 

No comments:

Post a Comment