Friday, May 26, 2017

இந்திய போர்விமானம் சுகோய் 30 காணாமல் போனது





இந்திய போர்விமானம் சுகோய் 30 காணாமல் போனது, இப்பொழுது பாகம் கண்டுபிடிக்கபட்டதாக சொல்கின்றார்கள்


ரஷ்ய தயாரிப்பு அது, அதி நவீன ரகம். அது பறக்கும்பொழுது சிக்கல் வந்தால் ஏன் சுட்டு வீழ்த்தபட்டால் கூட விமானி பாராசூட்டில் குதித்து தப்பலாம், காற்றுவெளியிடை படத்தில் கூட சொன்னார்கள்


சிரிய யுத்தத்தில் இதே விமானத்தை சுட்ட தீவிரவாதிகள் , அந்த விமானியினை உயிரோடு பிடித்து சுட்ட கொடுமையும் நடந்தது





பறக்கும் பொழுதும் தாக்கபடும் பொழுதும் எல்லா விவரங்களையும் அது கட்டுபாட்டு அறைக்கு அனுப்பிகொண்டே இருக்கும், ஆக அது காணமல் போக வாய்ப்பே இல்லை,

இன்னும் விமானிகள் கண்டுபிடிக்கபடவில்லை என்றால் ஏதோ மறைக்கின்றார்கள் என்றுதான் பொருள், அந்த விமானத்தில் விமானிகள் கொல்லபட வாய்ப்பில்லை, ஆனால் தப்பியிருக்கும் விமானிகள் நிச்சயம் தொடர்பு கொண்டிருக்கவும் வெண்டும்

விமானம் வேறு சீனா பக்கம் பறந்திருக்கின்றது

விமானிகள் பற்றி தகவல் இல்லையெனில் ராணுவம் எதனையோ மறைக்கின்றது என்றே அர்த்தம்..

அது மர்ம தாக்குதலோ இல்லை நம் விமானத்தில் சொல்ல முடியாத கோளாரோ அப்படி எதுவும் இருக்கலாம்..








Image may contain: aeroplane





 



 

No comments:

Post a Comment