Friday, May 26, 2017

சன்னிலியோன் கவலை




Image may contain: 1 person, close-up


எனக்கு யாருடைய புரு‌ஷனும் தேவை இல்லை ஆனாலும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை : சன்னிலியோன் கவலை


இவருக்கு அவரின் கணவனே தேவையில்லை, இதில் அடுத்தவள் கணவன் எதற்கு?


அம்மணிக்கு இன்னும் இந்திய மனைவிகள் பற்றி தெரியாது போல, முன்பின் தெரியாதவளை நோக்கினாலே கணவன் விழியினை தோண்டிவிடும் மனைவியர் உள்ள நாடு,





மணாளனின் மனமகிழ்வே முக்கியம் என்ற கண்ணகி, நளாயினி எல்லாம் புராணத்தோடு சரி, நிஜத்தில் சாத்தியமே இல்லை

புராணத்தில் வேண்டுமானால் சீதை தீகுளித்திருக்கலாம், ஆனால் நிஜத்தில் ஒவ்வொரு நாளும் தீகிணறில் இறங்கி எழும் இந்திய கணவர்கள் உண்டு, இதில் இந்திய ஜனாதிபதி முதல் அடிமட்ட தொழிலாளிவரை யாரும் தப்பமுடியாது.

அமெரிக்க சி.ஐ.ஏ , இஸ்ரேலிய மொசாத் எல்லாம் இந்திய மனைவியின் உளவுபார்த்தல் முன் ஒன்றுமே இல்லை, ஆனால் கணவனை மட்டும் உளவுபார்ப்பதால் அவர்களுக்கு சிக்கல் இல்லை

"இந்த‌ போன் மூலம் உங்கள் கணவனின் போனை கண்காணிக்கலாம் என்ற வாசகத்தை சொன்னால் தன்னிடமுள்ள தங்கத்தை எல்லாம் கொடுத்து இந்திய பெண்கள் போன் வாங்கும் வாய்ப்பபு உண்டல்லவா?" எனும் அளவிற்கு சாம்சுங்கும், ஆப்பிளும் யோசித்துகொண்டிருக்கின்றன‌

ஐரோப்பிய பெண்களை போல் அல்ல, கணவன் காதல் சர்ச்சை வந்தால் அவள் கூந்தல்வரை வெட்டியெடுக்கும் பத்தினிகள் நிறைந்த நாடு என்பதை சன்னிக்கு யாராவது சொல்லிவைப்பது நல்லது

ஆடையில்லா சன்னியினை பார்க்கலாம் தான், கூந்தலில்லா சன்னியினை பார்க்கமுடியுமா?

அதனால் அம்மணி இந்திய மனைவிகள் பற்றி தெரிந்துகொள்வது நல்லது















No comments:

Post a Comment