Wednesday, May 24, 2017

இவர்கள் அந்த வகைதான்...








Image may contain: 2 people, people smiling, close-up









ரஜினி கன்னடன், சிங்களன் தெலுங்கன் என பல வகையான சர்ச்சைகள் வருகின்றன வரட்டும், ரஜினி இங்குதான் தன்னை நிலைநிறுத்தி வாழ்கின்றார் வாழட்டும், நாளை தமிழர் நினைத்தால் ஆளட்டும்


அதற்கு முன் கொஞ்சம் விஷயங்களை பார்க்கலாம், சீமானுக்கும் பாரதிராஜாவிற்கும் தேவையான விஷயங்கள்


அங்கிள் சைமன் சொல்வார் அல்லவா? தெலுங்கர்கள் சிங்களரோடு சேர்ந்து தமிழரை கொன்றார் என்று அவரை போன்றவர்கள் இதனை தெரிந்து கொள்வது நல்லது, சீமான் எப்படிபட்ட பொய்யர், உளறுவாயர் கொஞ்சமும் வரலாறு தெரியாத தற்குறி என்பதற்கு இவைகள்தான் சாட்சி


17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கையில் குடியேறுகின்றார் “நீலபெருமாள்” என்ற தமிழர், சிங்களரோடு கலந்து தன்னை “நீலபெருமாள்கே ” என்று சிங்கள பெயர் மாற்றிகொள்கின்றார்


நீலபெருமாளின் மகன் வழி வாரிசு “டயஸ் வியசதுங்க பண்டாரநாயக்கா ”இவரது மகன் “டானியல் பண்டாரநாயக்கா”, இவர் போர்த்துகீசியரிடம் ஞானஸ்நானம் வாங்கி கிறிஸ்தவரானார் ,


அவரது மகன் “சொலொமன் பண்டாரநாயக்கா”.இவர் பிரிட்டிசாருக்கு உளவாளியாக செயல் பட்டவர். இவரது மகன் தொன் கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா. இவரது மகன் தொன் சொலொமன் டயஸ் பண்டாரநாயக்கா. இவரது புத்திரர் தான் S.W.R.D. பண்டாரநாயக்கா.


இந்த பண்டாரநாயக்கேதான் தமிழரை அழிக்க பிள்ளையார் சுழி போட்டவன்


ஆக தமிழனின் வாரிசு எப்படி சிங்களனாகியிருக்கின்றது பார்த்தீர்களா?, இன்னமும் பாருங்கள்


தமிழகத்தில் இருந்து தம்பி முதலியார் என்ற தமிழன் கொழும்பில் குடியேறினான். டச்சுகாரருக்கு உளவு பார்த்தல் அவன் செய்த தொழில். தன்னை” ஏட்ரியன் ஜெயவர்த்தன ” என்று பெயர் மாற்றி கொண்டான் தம்பி முதலியார்.


இவரது மகன் ஆப்ரஹாம் ஜெயவர்த்தன. இவரது மகன் ஜேம்ஸ் அல்பிரட் ஜெயவர்த்தன. இவரது மகன் யுஜின் வில்பிரட் ஜெயவர்த்தன.இவரது மகனே J.R.ஜெயவர்த்தன.
ஜெயவர்த்தனாவின் மகன் ரவி திருமணம் முடித்ததும் ஒரு தமிழ் பெண்ணையே !


இந்த ஜெயவர்த்தனே தான் கொழும்பில் தமிழருக்கு எதிராக ரத்த ஆறு ஓடவிட்டவன், இவனது அட்டகாச தொடர்ச்சிதான் புலிகள், அமைதிபடை இன்னபிற‌


(சிலர் இவர் செட்டியார் வம்சம் என்றார்கள், ஆனால் முதலியார் வம்சம் என்கின்றது ஆய்வு)


ஆக தமிழனின் வம்சாவளிதான் சிங்கள அடையாளத்தோடு தமிழரை அழித்திருக்கின்றது, தெலுங்கு வம்சம் அல்ல‌


இந்த சீமான் இப்படி ஈழபொய்களை அவிழ்த்துவிட்டு இப்பொழுது ரஜினி பக்கம் வந்திருக்கின்றார்


புலிகளை ஆதரித்த மலையாளி எம்ஜிஆர் இவருக்கு தமிழன், புலிகளை ஆதரிக்க மறுத்த கலைஞர் இவருக்கு தெலுங்கர்


இப்பொழுது ரஜினி கன்னடர் என பொங்க தொடங்கிவிட்டார், இது இந்தியா, எந்த இந்தியனும் எங்கும் செல்லலாம்


அப்படி மண்ணின் மைந்தர் கோஷம் பேசினால், ராமநாதபுரம் எனும் சேது நாட்டின் சீமானுக்கு, சென்னப்பன் நாயக்க பட்டினத்தில் என்ன வேலை?


அந்த அரணையூர் எனும் கிராமத்திலே குடிசை போட்டு அமரலாம் அல்லவா? அதுதானே அவரது சொந்த மண்..


தமிழகமும் பண்டை நாடுகளின் தொகுப்பு, தமிழகம் தமிழ்மொழி பேசிய நாடுகளின் தொகுப்பே தவிர முழு தமிழ்நாடாக இருந்ததே இல்லை...


சீமான் இப்படி கிளறினால், மற்றவர்கள் அப்படி கிளறுவார்கள், அப்பொழுது பாரதிராஜா தேனியிலும், சீமான் இராமநாதபுரத்திலும் புரட்சி செய்யலாம்


இவர்கள் போகும் போக்கு அப்படித்தான் இருக்கின்றது, தமிழகத்து விஷயங்களை முடிவு செய்யும் அதிகாரத்தை இவர்களிடம் கொடுத்தது யார்? தமிழகத்தில் யார் வரலாம், செல்லலாம் என சொல்ல இவர்கள் யார்?


தமிழக மன்னர்களா?


அதே தான் விஷயம் அங்குதான் செல்லும், பெங்களூர் ரஜினிக்கு சென்னையில் என்ன அதிகாரம் என கேள்வி வந்தால், சேது நாட்டு காரனுக்கும் , வருச நாட்டு காரனுக்கும் சென்னப்பன் ஊரில் என்ன அதிகாரம்?


இவர்கள் இத்தோடு திருந்திகொள்வது நல்லது, விளபரத்திற்கு ஆயிரம் வழி உலகில் உண்டு, அய்யாகண்ணு கூட டெல்லியில் காட்டினார், காட்டினார் என்றால் விளம்பரத்தை காட்டினார்


அப்படி ஏதும் இவர்கள் செய்யலாம், மாறாக அவன் வரகூடாது, இவன் வரகூடாது என சொல்ல யாருக்கும் உரிமையில்லை


அதுவும் மலையாளி எம்ஜிஆர் முன் மண்டியிட்டு, கன்னடனிடம் சினிமா படித்து, கன்னடத்தி முன் ஹிஹிஹி என கைகட்டி,வெள்ளையன் டாலரில் வசூல் செய்பவர்கள் எல்லாம் இப்படி பேசுவது வெட்க கேடானது.


அதுவும் பச்சை தமிழன் பன்னீர், அவரும் சரியில்லை என பச்சை தமிழன் பழனிச்சாமிவரை முதல்வராக்கியாயிற்று , தமிழன் பழனிச்சாமியின் பொற்கால ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கின்றது, வேறு என்ன?


இந்த அலப்பறைகள் ஒன்று தனிதமிழ்நாடு கேட்கவேண்டும் அதுவும் செய்யமாட்டார்கள், அல்லது இந்திய நீரோட்டத்தில் இணைய வேண்டும் அதுவுமில்லை


பின் என்னதான் இவர்கள் பிரச்சினை? தன் பிரச்சினை என்ன என சொல்லதெரியாதவனை இந்த‌ உலகம் என்ன சொல்லி அழைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்


இவர்கள் அந்த வகைதான்...




 

No comments:

Post a Comment