Wednesday, May 31, 2017

இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று

இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று, அதுவும் மதுரை நீதிமன்ற அறிவிப்பு ஒருவித பரபரப்பினை ஏற்படுத்துகின்றது


ஒரு நீதிமன்றம் சில காரியங்களை சொல்லுமாயின் அதில் ஓரளவேனும் நியாயம் இருக்கலாம் என்பது தியரி, அப்படி மதுரை தீர்ப்பு உலகில் விவாதிக்கபடுகின்றது


கண்ணகியும், நக்கீரனும் உலவிய மண் அல்லவா? நியாயத்தினை சொல்கின்றது




அது இருக்கட்டும்


நேற்று கடும் காமெடி செய்தவர் இருவர், ஒருவர் நாஞ்சில் சம்பத் வழக்கமான காமெடி, கூடவே ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்திற்கு பேராபத்து என கொளுத்திபோட்டிருக்கின்றார்


ரஜினி வந்தால் யாருக்கு ஆபத்து? சாட்சாத் அதிமுகவிற்கு, அதனை தமிழக ஆபத்து என ஒப்பாரி வைக்கின்றார் அன்னார், கூடவே தன் சொந்த கட்சி முதல்வரையும் திட்டியிருக்கின்றார்


ஆக அன்னார் நிதானத்தில் இல்லை என்பது புரிகின்றது, இவரை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, நாளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான் கோபாசே என கூசாமல் சென்றுவிடும் ரகம்


இன்னொருவர் பாரதிராஜா, திருமுருகனை வெளியே விடு என கத்துகின்றார், எடப்பாடி மானமில்லா தமிழனாம் , இதனை கண்டுபிடிக்க இவருக்கு இத்தனை காலம் ஆகியிருக்கின்றது என்பதுதான் சோகம்


திருமுருகனை ஆதரித்து கூட்டம் போட்ட அந்த மொத்த இயக்குநர் கும்பலையும் உள்ளே தள்ளலாம், அவர்கள் என்ன தேசம் காக்கும் தளபதிகளா? இல்லை அணுவுலை விஞ்ஞானிகளா? ஒன்றுமே இல்லை, நாட்டிற்கு ஒரு பாதிப்பும் வராது


இந்த திருமுருகன் காந்தி விவகாரத்தில் குரல் கொடுத்து மாட்டியிருப்பவர் யாரென்றால் மு.க ஸ்டாலின்


அதாவது லாட்டரி புகழ் மார்ட்டின் என்றொருவர் உண்டு, மோசடி பேர்வழி, இவர் எடுத்தபடத்தில் முன்பு கலைஞர் கதை வசனம் எழுதினார், அப்பொழுதே சர்ச்சை வெடித்தது


அந்த மார்ட்டினின் மகன் தமிழர் விடியல் என்றொரு கட்சி நடத்தினார், திருமுருகனோடு அவரும் கைதானர், அவரை விடுவிக்க சொல்லிதான் ஸ்டாலின் குரல் கொடுத்தார் என சில பார்வைகள் திரும்புகின்றன‌


ஆக சூனியத்தை தேடி சென்று நடு சக்கரத்தில் அமர்ந்திருக்கின்றார் ஸ்டாலின், இதனை சொன்னால் அவரின் தந்திரம் உனக்கு புரியாது என்பார்கள்


இப்பொழுது மானம் ரோசம் உள்ள தமிழனை பாரதிராஜா தேடுகின்றார், எம்ஜிஆர் ஜெயா இல்லாத காலத்தில் பாரதிராஜாவிற்கு ரோசம் பொத்துவிட்டது


சிலரை சேர்த்துகொள்கின்றார், ஒரே சத்தம்


ஆக தமிழகத்தில் சினிமா இயக்குனர்களுக்கு தவிர யாருக்கும் வெட்கமில்லை என்பது அவரின் கொள்கை


திருடர்களுக்கும், தேசவிரோதிகளுக்கும், அரை பைத்தியங்களுக்கும், சுயநல வாதிகளுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பது மானம், ரோசம் என்றால் அந்த ரோசம் பாரதிராஜா கும்பலிடம் மட்டும் இருந்துவிட்டு போகட்டும்



No comments:

Post a Comment