Tuesday, May 30, 2017

ஆண்டவன் கட்டளை படம் ஓடி கொண்டிருக்கின்றது

ஆண்டவன் கட்டளை படம் ஓடிகொண்டிருக்கின்றது


சிவாஜி கணேசன் அப்படி ஒரு நடிப்பினை கொட்டியிருக்கின்றார், கல்லூரி பேராசிரியராகவும், ஒரு பாடலில் சாமியார் உடையிலும் கலக்குகின்றார்

அற்புதமான நடிகன், சந்திரபாபு தன் உச்சகாலங்களில் நடித்த படம், பின்னியிருக்கின்றார்




படம் நேரு மறைந்த பின் வந்திருக்கலாம், நேருவின் பெருமைகளை முடிவில் அழகாக சொல்கின்றார்கள், அக்கால படங்கள் அப்படி சமூக பொறுப்போடு வந்திருக்கின்றன‌


இனி இப்படி நல்ல தலைவர்கள் பெருமையினை சொல்லும் படங்கள் வரப்போவதே இல்லை


படத்தில் மிக குறிப்பிடதக்கவர் தேவிகா


அளவான உயரம், குண்டு கண்கள், உதட்டில் சிரிப்பு என அவர் வரும்பொழுது எப்படி இருக்கின்றது? குறிப்பாக அவர் சிரிக்கும்பொழுது கன்னத்தை பார்த்தவுடன் அப்படித்தான் சொல்ல முடியும்


எப்படி?


தேவிகா அக்கால குஷ்பூ...






கொசுறு


தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் : பாரதிராஜா ஆவேசம்


அதாவது தேசத்திற்காக எல்லையில் பல யுத்தம் நடத்திய திருமுருகனை உள்ளே போட்டுவிட்டார்கள், அவரை வெளியிட சொல்லி இயக்குநர்கள் கூட்டமாம், அதில் அன்னார் சீறிவிட்டார், அவர் சிறை செல்லவும் தயாராம்


இவரை சிறைக்கு அனுப்ப தேவையில்லை, மாறாக மனநல மருத்துவரிடம் அனுப்புவது நல்லது




பின்னே?


திருமுருகனை உள்ளே போட்டிருப்பது அதிமுக அரசு, அதன் முதல்வர் பச்சை தமிழன் பழனிச்சாமி


அவரை ஒன்றும் சொல்லாமல் இன்னும் தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என சொல்பவரை வேறு எங்கு அனுப்புவது? அங்குதான் அனுப்ப வேண்டும்.









No comments:

Post a Comment