Monday, May 29, 2017

நாவை அடக்க வேண்டியது குஷ்பூ அல்ல...

மாட்டுகறி சர்ச்சை வலுக்கின்றது,


அதிமுக, பாஜக தவிர‌ எல்லோரும் குரலெழுப்புகின்றார்கள்


முன்பொரு காலத்தில் மாட்டுகறி தின்னும் பாப்பாத்தி என ஜெயா மீது சர்ச்சை வந்தது, முதலில் மறுத்தாலும் பின் அப்படித்தான் நான் என்பது போல நடந்துகொண்டார் ஜெயா, பெரிதான எதிர்ப்பு ஏதும் பின்னாளில் இல்லை, உலகமும் அப்படி நம்பிகொண்டது





ஜெயாவிற்கு மாட்டுகறி உண்ணும் பழக்கம் உண்டு என்பது பின் சாதரண விஷயமாயிற்று

அதெல்லாம் இப்பொழுது அக்கட்சினர் நினைவுக்கு வராது, அவர்கள் அப்படித்தான் நன்றி கெட்டவர்கள்

கூவத்தூரில் மாட்டுசூப் குடித்ததை கூட மறைத்துவிட்டார்கள்

ஆனால் அம்மா தீபா, நீங்கள் அவரது ரத்த உறவு, நன்றி மறக்கலாமா?

நீங்களாவது என் அத்தை அன்றே மாட்டுகறியினை ஆதரித்தார் என கிளம்ப கூடாதா?

மிஸ்டர் மாதவன், (நடிகர் மாதவன் அல்ல தீபா மாதவன்), நீங்களாவது என் பெரியம்மா ஜெயலலிதாவே மாட்டுகறி உண்டவர், ஆதரித்தவர் என சொல்ல கூடாதா?

நாலு வோட்டு கிடைக்க வழி சொன்னால் கேளுங்கள்..








Image may contain: 3 people


சோறு போட்ட விளை நிலத்தை பிளாட் போட்டு விற்றவன், உடன் வாழும் இந்நாட்டின் சகோதரர்களை எல்லாம் மதத்தின் பெயரால் பிரித்து பார்த்து வெறுப்பவன் எல்லாம் குஷ்பூவினை கண்டிக்கின்றானாம்


இந்துக்களின் விரோதியா? அப்படி அவர் என்றாவது நடந்துகொண்டாரா? ஒருகாலும் இல்லை..


தேசமே பொங்கி கொண்டிருக்கின்றது, கேரள முதல்வர் பகிரங்கமாக அறிவிக்கின்றார், நாடெங்கும் தடையினை மீறி மாட்டுகறி உண்ணுகின்றார்கள்




விவகாரம் எல்லோரும் எதிர்ப்பது, மொத்த இந்திய சகோதரர்களும் எதிர்க்கும் விஷயத்தைத்தான் குஷ்பூவும் எதிர்க்கின்றார்


அதற்குள் அவரை கண்டிப்பார்களாம், அடக்குவார்களாம்


கேரளாவில், வட மாநிலங்களில் இன்னும் ஏராளமான இடங்களில் பொங்கிகொண்டிருக்கும் சகோதரர்களை அடக்கிவிட்டு அதன் பின் குஷ்பூவினை மிரட்ட இவர்கள் வரலாம்


இப்படி மிரட்டினால் எங்கள் தங்க மித்ரா அஞ்சிவிடுவாரா?


இந்த பதர்களை போல பல்லாயிரம் பதர்களை பார்த்து தாண்டி வந்தவர் குஷ்பூ


அப்படி அவர் என்ன சொல்லிவிட்டார்?


மாடு வெட்டவேண்டாம் என்றால் காலில் செருப்பு போடமாட்டீர்களா என்றார்


மாடு என்றுதான் சொன்னாரே தவிர, பசு, காளை, எருது என அவர் சொல்லவில்லை, மாடு என்றார்


இவர்களாக அது பசுமாடு என பொங்கி தீர்க்கின்றார்கள், அப்படி பசுவினை நேசிப்பவர்கள், ஓய்வுபெரும் பால் மாடுகளை இவ்வளவு நாளும் என்ன செய்தார்கள்?


கேரளாவிற்கு அடிமாடாய் அனுப்புவதை பார்த்துகொண்டிருந்தார்கள், இனி அந்த மாடுகள் சாலையில் அனாதையாய் அலையும் பொழுது இவர்கள் செய்ததென்ன?


ஒன்றுமேயில்லை


என்னவோ புதிதாக குதிப்பார்களாம், அதுவும் அவர் என்ன சொன்னார் என தெரியாமலே குதிப்பார்களாம்


ஒரு இந்திய குடிமகள் அவள் கருத்தை சொன்னால், மிரட்ட இவர்கள் யார்? அப்படியும் இந்தியா முழுக்க மிரட்டி விட்டு இங்கு வரட்டும்..


பசு என குஷ்பூ சொன்னாரா? இவர்கள் காளை மாட்டிலும் பால் கறக்கும் கூட்டம் போல..


இப்படி மிரட்டுவதை எல்லாம் ஏற்றுகொள்ள முடியாது, இவர்களை குஷ்பூ ரசிகர் மன்றம் சார்பாக கண்டிக்கின்றோம்


இந்த மிரட்டல்களுக்காக அவருக்கு தகுந்த காவல்துறை ஏற்பாடுகள் செய்யபட வேண்டும் என சங்கத்தின் சார்பாக வலியுறுத்துகின்றோம்.


நாவை அடக்க வேண்டியது குஷ்பூ அல்ல, வீணாக அவரை சீண்ட வேண்டாம்.


மொத்த இந்தியாவும் சீறும் பொழுது குஷ்பூவினை மட்டும் மிரட்டுவது எப்படி?


எதிர்ப்புகளை தாண்டியே வளர்ந்தவர் அவர், பெரும் புயலிலும் நிலைத்தவர், கடும் அலையிலும், நெருப்பாற்றிலும் நீந்தியவர்


இந்த மிரட்டல்கள் அல்லாம் அவர் வளர்ச்சிக்கே அன்றி, வேறெதுவும் அவரை செய்துவிட முடியாது










No comments:

Post a Comment