Saturday, May 27, 2017

உங்கள் முகமூடிகளை கிழித்துகொண்டே இருப்போம்..



Image may contain: 2 people, people smiling, people sitting and text


இப்பொழுதெல்லாம் இந்த உணர்வாளர்களின் சத்தம் பைத்தியக்காரன் குரலாகவே இருக்கின்றது, உச்சமாக என் பிள்ளைக்கு நான் தகப்பன் இன்னொருவன் எப்படி தகப்பனாக முடியும், என் மனைவி படுக்கையில் இன்னொருவன் படுப்பதா? என மகா அபத்தமாக பேசுகின்றார்கள்


இந்த சீமான், சத்யராஜ், பாரதிராஜா வீட்டிற்குள் சென்று யார் அப்படி சொன்னார்கள்? சொல்ல முடியுமா?


இது சமூக வாழ்வு , அதற்கென சில கட்டுப்பாடுகளும் வரையறைகளும் உண்டு , அதில் நான் தகப்பன் , நான் கணவன் என்றெல்லாம் பைத்தியம்தான் சொல்வான்


இவர்களை எல்லாம் தமிழர்களின் பிரந்தியாக்கியது யார்? 8 கோடி தமிழருக்கும் இவர்களா பிரதிநிதிகள்? என் இனம் என இவர்கள் எப்படி சொல்லலாம்?


இந்தியா பிடிக்கவில்லை , அது ஆக்கிரமிப்பு என்றால் தேனி பாரதிராஜா, சிவகங்கை சீமான், கோவை சத்தியராஜூக்கெல்லாம் நெல்லை மக்கள் அடங்க முடியுமா?


அவர்கள் ஆள்வது போல நான் உங்களை ஆள்வேன் காரணம் நீ தமிழன் என்பதா இன உணர்வு? இது அடக்குமுறை அல்லவா?


தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக எங்களை எல்லாம் உங்கள் பிள்ளைகள் , பொண்டாட்டிகள் என பொதுஇடத்தில் சொல்வீர்களா? இது என்ன வகை நாகரீகம்??


உங்களுக்கு இப்பொழுது என்ன? ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது , அதுதான் நோக்கம்


சரி அவர் இதற்கு முன் ஆண்டாரா? ஊழல் செய்தாரா? அவரால் தமிழகம் நாசமாயிற்றா? என்ன நடந்தது? ஒன்றுமில்லை


ஆனால் ஆண்டு ஊழல் செய்து சிறைக்கு சென்ற கட்சி இருக்கின்றது , பெரும் ஊழல் செய்த கறையோடு இன்னொரு கட்சி இருக்கின்றது


நீங்கள் மானமுள்ள, வீரமுள்ள , தமிழக அக்கறையுள்ளவர்கள் என்றால் என்ன சொல்லியிருக்க வேண்டும்????


இந்த அதிமுகவின் ஆட்சியில் ஊழல் என்றும், பெரும் மோசடி என்றும் அதன் தலைவரை குற்றவாளி என்று தீர்ப்பிடபட்டிருக்கின்றது, அதனை அடுத்த் கட்ட தலைவர்கள் சிறையில் இருக்கின்றனர், இந்தியாவிலே முதல் முறையாக இடைதேர்தல் பணம் கொடுத்ததற்காக தேர்தல் முடக்கபட்டிருக்கின்றது


அக்கட்சியின் தலைவர் இதோ சின்னத்தை வாங்க போய் சிறையில் இருக்கின்றார்


இப்படிபட்ட ஊழல் கட்சி வேண்டாம் அதனை தடை செய்யவேண்டும் என சொல்வீர்களா? தைரியம் உண்டா?


ஆக ஆண்டு அனுபவித்து பெரும் ஊழலையும் சீரழிவினையும் செய்து, இன்னும் ஆள துடிப்பவர்களை விட்டுவிடுவார்களாம், ஆனால் இன்னும் அரசியலுக்கே வராத ரஜினியினை கண்டிப்பார்களாம்


நீங்கள் மானமுள்ளவர்கள் என்றால் அதிமுக அரசியலை விட்டு அப்புறபடுத்தவேண்டும் , தடை செய்ய வேண்டும் என சொல்லிவிட்டு ரஜினி பக்கம் வாருங்கள்


இந்த இம்சைகளுடன் சுப.உதயகுமாரும் சேர்ந்து கொண்டார்


அவர் மீது ஒரு மரியாதை உண்டு, அந்த இடிந்தகரை கடற்கரையில் கூடிய கூட்டத்தை வன்முறையாக்காமல் கையான்டார் என்ற அபிமானம் என்றும் உண்டு


ஆனால் அவரும் இந்த அல்லகைகளுடன் கரம் கோர்ப்பார் போல‌


மிஸ்டர் உதயகுமார், உங்களை போலவே நாங்களும் அணுவுலை எதிரி, ஆனால் அதனை பாராளுமன்றத்தில் பேச உங்களை அனுப்ப முயற்சித்தபொழுது நீங்கள் வாங்கிய வாக்கு +2 மொத்த மதிப்பெண்ணுக்கும் குறைவு


ஆக அந்த மக்கள் அப்படி முடிவெடுத்த பின் நீங்கள் என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்ய முடியும்


அந்த அணுவுலையின் அழிவினை சொல்லலாம் , இது ஆபத்து என சொல்லலாம் அதற்கு மேல் தமிழ்நாட்டை பிய்த்து எடுத்துவிடலாமா? தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க அணுவுலை உண்டு


காங்கிரஸ் ஆட்சி என்றால் பெரும் கூட்டம் கூட்டிய நீங்கள், பாஜக என்றால் இப்படி இந்த அல்லக்கைகளுடன் மட்டும் பேசிகொண்டு கைகொர்ப்பது என்ன வகை?


இவர்களுக்கெல்லாம் நாங்கள் சொல்வது ஒன்றுதான், நாங்கள் இந்தியர்கள், அதனை விட்டு என் பிள்ளை, என் பொண்டாட்டி என மானங்கெட்ட விஷயங்களை சொல்வீர்கள் என்றால் விளைவு கடுமையாக இருக்கும்


தமிழ் பேசுவது ஒன்று தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு , மற்றபடி பண்டைய காலமுதல் நீங்கள் வேற நாடு, நாங்கள் வேறு நாடு. ஏராளமான போர்கள் நடந்த வரலாறும் உண்டு


இன்னும் நெல்லை தமிழன் உட்பட்ட தமிழகத்தில் இது என் பிள்ளை, என் பொண்டாட்டி என சொல்வது பெரும் அநாகரீகமான மோசடி


தமிழகத்தை வாழவைப்போம் , ரஜினி வேண்டாம் என்றால் முதலில் ஏற்கனவே கெடுத்து இன்னமும் கெடுக்க துடிக்கும் அதிமுகவினை வெளியேற்றிவிட்டு ரஜினியினை தடுக்க வாருங்கள்


நீங்கள் சொல்லவருவது என்ன? அதிமுக கொள்ளையடித்து கொண்டே இருக்கட்டும், எங்களுக்கும் பாயட்டும் ,ரஜினி வந்தா அதனை கெடுப்பது??? என்பதே.. அதனைத்தான் சொல்ல வருகின்றீர்கள்


சசிகலாவினை, தினகரனை ஆதரிக்கும் பாரதிராஜா ரஜினியினை எதிர்க்க அதுதான் காரனம்.....
இதோ எம்ஜிஆரி கர்லா கட்டை என காட்டி ஆனந்தபடும் சத்யராஜ் ரஜினியினை எதிர்க்க என்ன இருக்கின்றது? அன்றே ஏய் மலையாளி என எம்ஜிஆரின் தொப்பியினை தட்டிவிட்டாரா?


இந்த சீமான் ஜெயா அரசிற்கு பகிரங்கமாக வாக்கு கேட்கவில்லையா?


இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? நாங்கள் இனவுணர்வு பேசிகொண்டே அதிமுகவினை ரகசியமாக ஆதரிப்போம் என்பதன்றி வேறன்ன? இதுவா இன உணர்வு... சீ சீ தூ தூ..


நீங்களா தமிழரின் இன காவலர்கள்.. அட ச்சீ..


இன்னும் இம்மாதிரியான மோசடி அறிவிப்புகளையும், என் குடும்பம் , என் பொண்டாட்டி என அசிங்கமாக உளறிகொண்டிருந்தால்


இந்தியன் என்றால் இந்தியனாகவும், அல்லது மானமிக்க தென்பாண்டி நாட்டு பாண்டிய வம்சமாகவும் எங்கள் பாணியில் நாங்களும் பதிலளிப்போம்


உங்கள் முகமூடிகளை கிழித்துகொண்டே இருப்போம்..













 




 

No comments:

Post a Comment