Saturday, May 27, 2017

வீரப்பன் படத்தினையும் மாட்டுவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஜெய்லலிதா படத்தை சட்டசபையில் மாட்டினால், வீரப்பன் படத்தினையும் மாட்டுவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன்


மிஸ்டர் இளங்கோவன், என்ன பேசுகினறீர்கள், சும்மாவே அங்கிள் சைமன் வீரப்பன் படத்தை தூக்கிகொண்டு அலைகின்றார்


நீர் இப்படி சொன்னால் இளங்கோவன் எங்களை ஆதரித்துவிட்டார், போராட்டம் மாபெரும் வெற்றி, புரட்சி வெற்றிஎன கிளம்பிவிடமாட்டாரா?




அதனால் வேறு தலைசிறந்த கொலைகாரனை பற்றி சொல்லலாம், ஆட்டோ சங்கர், அட்டாக் பாண்டி, மணல்மேடு சங்கள், அயோத்தி குப்பம் வீரமணி போன்றோரை பரிசீலியுங்கள்..







கொசுறு

ஆழி சூழ் உலகுதான், அப்படி சொல்வதை விட மீன் சூழ் உலகு என்பதே பொருத்தமாக இருக்கும்


இந்த உலகத்தை மீன்கள்தான் சூழ்ந்திருக்கின்றன, கடலை மட்டுமல்ல , உணவு உலகத்தையும் அவைகள்தான் ஆள்கின்றன‌


"மீனை மிஞ்சிய சுவையும் இல்லை
குஷ்பூவினை மிஞ்சிய அழகும் இல்லை"






வெள்ளையர்கள் வியாபாரத்தில் கெட்டிகாரர்கள் எல்லா விதமான சூழலையும் அவர்கள் பணமாக்குவார்கள்,






அப்படி பின்லேடன் கொல்லபட்டபொழுது அவரோடு இருந்த அவரின் மனைவியினை பிடித்து பின்லேடன் கொல்லபட்ட இரவில் நடந்தது என்ன? என புத்தகம் எழுதவைத்துவிட்டார்கள்


சில விஷயங்களை கசியவிட்டு பல்ஸ் பார்க்கின்றார்கள், புத்தக விற்பனை எகிறும் என கணக்கிடுகின்றார்கள்




உலகம் முழுக்க அப்புத்தகத்திற்கு எதிர்பார்ப்பாயிற்று


நாமும் அவர்களுக்கொரு ஐடியா கொடுக்கலாம், "அப்பல்லோவில் 3 மாதம்" , "கூவத்தூர் திருவிழா" என சசிகலா புத்தகம் எழுதினால் எப்படி இருக்கும்?,


அந்த அம்மாவும் சிறையில் சும்மாதான் இருக்கின்றது


யாரும் நல்ல வியாபார பதிபகத்தார் இருந்தார் முயற்சிக்கலாம்










 

 



No comments:

Post a Comment