Tuesday, May 30, 2017

சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை

சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை


நாட்டின் அறிவு கோவில்களாக கருதபடுபவை அந்த ஐஐடிக்கள், அரசு அதற்கு அள்ளிகொடுக்கும் பணமும், மாணவர்களுக்கு அதன் மீதான கனவும் சாமான்யமல்ல‌


உலகளவில் மதிக்கபடும் இந்திய அறிவுநிலையங்களில் அதுவும் ஒன்று




அங்கு ஏன் அரசியல்? அங்கு ஏன் மாட்டுகறி அரசியல்?


அந்த அறிவு கோவிலில் ஐன்ஸ்டீன் வாசகர் வட்டம், நியூட்டன் வாசகர் சதுரம், ராமானுஜம் வாசகர் முக்கோணம், கெப்ளர் ஆயிலர் வாசகர் கன சதுரம் என இருந்தால் அது நல்லது, அப்படித்தான் இருக்க வேண்டும்


புனிதமான அந்த நிலையத்தில் சாதியோ, புரட்சியோ அந்த பெயரில் அரசியல் வட்டம் எதற்கு?


அம்பேத்கரை படிப்பவர்கள் சட்டகல்லூரியில் அப்படி வட்டம் வைத்து அவரைபோல் படித்து உயர்ந்தால் சரி, பெரியார் போல உருவாக சிந்தனை போதும், ஐஐடி எதற்கு?


ஆக அம்பேத்கருக்கும், பெரியாரின் சிந்தனைகளுக்கும் ஐஐடியில் என்ன வேலை?


முதலில் கல்வி நிலையங்களில் இம்மாதிரி அரசியல் கோஷ்டிகள் ராஜாஜி, சாவர்க்கர், அம்பேத்கர், பெரியார் என யார் பெயரில் இருந்தாலும் தடை செய்ய வேண்டும்


மாட்டுகறி சுவைபார்க்க ஒரு உணவகம் போதாதா? ஐஐடி எதற்கு?????


அரசியல் அந்த அறிவுகோவிலில் இருந்து வெளியேறட்டும், மதம் அதிலிருந்து ஓடட்டும்


அறிவிலும், விஞ்ஞானத்திலும் அந்த அறிவு கோயில்கள் ஓளிவீசட்டும்


ஐன்ஸ்டீகளும், சீனிவாச ராமனுஜமும் , ஜிடி நாயுடுவும், மார்க் சுக்கர்பெர்க்கும், சர்சிவி ராமனும் அதிலிருந்து வந்தால் போதும்,


அரசியல் எதற்கு? அது உருவாக ஏராளமான இடங்கள் இருக்கின்றன‌



No comments:

Post a Comment