அங்கிள் சைமன்
ரஜினி வந்தேறி, அவன் வந்தேறி என ஊரெல்லாம் ஒப்பாரி வைத்துவிட்டு, தந்திடிவி பாண்டே முன் அமர்ந்திருக்கின்றீர்
பாண்டே பூர்வீகம் என்ன? எங்கிருந்து வந்தவர்கள் அவர்கள் பூர்வகுடியா?
"என்றாவது தமிழன் என்னை கேள்வி கேட்கும் நீ வடக்கத்திய வந்தேறி, பாண்டே என்பது தமிழ்பெயரா? நீயா செந்தமிழனை கேள்வி கேட்பது" என சீறியிருக்கின்றீரா?
பிழைக்க வந்தவன் என்னை கேள்விகேட்பதா? அமைதியாக வாழ்ந்துவிட்டு போ என கத்தியிருக்கின்றீரா?
அவர் முன்னால் ஹிஹீஹிஹ்ஹி என ஈன் சிரிப்பு சிரித்துவிட்டு, வெளியே வந்து கத்துவது பெயர்தான் மானமா?
பாண்டே உங்களுக்கு தம்பி, வேறு எல்லோரும் வந்தேறியா?
இந்த நாடகத்தை எல்லாம், இந்த ஈன அரசியல் எல்லாம், உங்களை எல்லாம் ...
இதன் பெயர் என்ன என்று சொல்வது சபை நாகரீகம் அல்ல..
சார்.. சீமானிடம் பாண்டே எழுப்பிய கேள்விகள் உங்கள் கேள்விகள் போலே இருந்தன சார் என பலர் சொல்கின்றார்கள்
அந்த வீடியோ பார்க்கவில்லை, ஆனால் இவை எல்லாம் என்றோ கேட்கபட்டு சைமனை ராமேஸ்வரம் கடலில் தற்கொலை செய்யும் அளவிற்கு என்றோ கேட்டிருக்க வேண்டிய கேள்விகள்
அவரை எல்லாம் ஒரு மனிதராக மதித்து, இவரை வளர்க்க முயன்றதே தந்திடிவி தான், அதற்கு பின்னணி காரணம் பல உண்டு
அன்றெல்லாம் நம்மை போல கேட்டாரா? இன்று கேட்க வேண்டிய அவசியம் என்னவென்றால், மொத்த தமிழகமும் சீமான் கழுத்தில் கயிறை கட்டி இழுத்து சென்று தொங்கவிட தயாராகின்றது, நழுவ பார்க்கின்றார் பாண்டே
நாம் எழுதுவதை பாண்டே கேள்விகளாக கேட்பாரோ இல்லையோ, நமக்கு நியாயம் என தோன்றுவதை கேட்டு கொண்டே இருப்போம்..
No comments:
Post a Comment