Wednesday, May 24, 2017

பிரபாரனின் தாயாரை கலைஞர் ஏன் சிகிச்சை அளித்து காக்கவில்லை?




Image may contain: 1 person, sitting


பார்வதி அம்மா எனும் பிரபாரனின் தாயாரை கலைஞர் ஏன் சிகிச்சை அளித்து காக்கவில்லை என பலர் கேட்கின்றனர், இதற்கு திமுகவினர் பொறுமையாக பதில் அளிக்கின்றனர் சுப.வீ உட்பட‌


"பிரபாகரனின் அண்ணன் அக்கா எல்லோரும் கனடாவில் இருக்க, அவர்களுக்கு எல்லாம் தன் தாயினை காக்க வராத அக்கறை எங்களுக்கு மட்டும் வரவேண்டுமோ.." என கேட்டால் முடிந்தது விஷயம்


பிரபாகரனுக்கே தன் தாய் தந்தை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை, அமெரிக்காவிலும் கொரியாவிலும் ரஷ்யாவிலும் ஆயுதம் கடத்திய அவருக்கு அங்கு தன் தாய்க்கு சிகிச்சை அளிக்க வகை செய்ய முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?





உலகெல்லாம் எங்கும் யாரையும் கொல்லும் சக்திபடைத்த, உலகின் எல்லா மூலையில் இருந்து பணம் முதல் ஆயுதம் வரை கடத்தும் திறன்படைத்த, வெளிநாடுகளில் இருந்து விமானம் வரை வாங்கிய புலிகளுக்கு அவரின் அன்னையினை மட்டும் அனுப்ப முடியவில்லையாம்

அண்டன் பாலசிங்கம் லண்டனில் இருக்க, நெடியவன் பாரீசில் இருக்க புலி பினாமி எல்லாம் ஐரோப்பாவில் இருக்க பார்வதி அம்மாளை கோபாலபுரத்தில் இருந்து தான் காக்க வேண்டுமாம்.

புலிகளின் தளபதி பால்ராஜின் சிகிச்சை சிங்கப்பூரில் மகா அவசரமாக நடக்குமாம், ஆனால் பார்வதி அம்மாளை மட்டும் சென்னைக்கு கொண்டு வருவார்களாம்..

எவ்வளவு பெரும் நாடகம்..

இப்படி செவிட்டில் அடித்து சொல்ல வேண்டிய சொல்லவேண்டிய பதிலுக்கு ஆளாளுக்கு சுப வீ உட்பட திமுகவினர் முணகி கொண்டிருக்கின்றனர், இவர்களை எல்லாம் வைத்து கொண்டு....













 


 

No comments:

Post a Comment