இந்த பிரியங்கா சோப்ரா எனும் நடிகையினை பிரதமரால் இந்தியாவில் சந்திக்கவே முடியாதா?ஜெர்மனி சென்றுதான் அவரை சந்திக்க வேண்டுமா?
அம்மணிக்கு தாதா சாகிப் பால்கே விருது வேறு கொடுக்க போகின்றார்களாம்
அப்படி என்ன இந்த அம்மணி கலைதுறைக்கு செய்துவிட்டார்? என நாம் கேட்க கூடாது
பெரியார் படத்தில் மணியம்மையாக குஷ்பூ நடிக்காததையா பிரியங்கா நடித்துவிட்டார்?
குஷ்பூ பெறாத எந்த விருதும் கலைவிருதுகளே அல்ல என்பதால் இதனை நமது மன்றம் புறக்கணிக்கின்றது
வருங்காலத்தில் என்றாவது பிரியங்கா நடித்தார் என்றால் பின்னாளில் அவருக்கு "குஷ்பூ விருது" வழங்க வாய்ப்பு வரலாம், இப்போதைக்கு எல்லாம் இல்லை
பால்கே விருது பெற்றவர்க்கு எல்லாம் குஷ்பூ விருதுகொடுத்து அதன் பெருமையினை குறைக்க முடியாது
இப்போதைக்கு மிக சிறந்த நடிப்பினை வழங்கிகொண்டிருப்பது பிரதமர் மோடி, இன்னும் இரு வருடத்தில் அவரின் நடிப்பில் மெருகு இன்னும் ஏறலாம்
அதன் பின் அவருக்கு குஷ்பூ விருது நிச்சயம் வழங்கபடும் வாய்ப்பு இருக்கின்றது, இப்போதைக்கு மோடியின் அபார நடிப்பிற்காக அவர் பெயர் ""குஷ்பூ விருது" பரிசீலனையில் மட்டும் இருக்கின்றது.
No comments:
Post a Comment