Tuesday, March 7, 2017

கலைஞர் நல்லவரா? கெட்டவரா?





கலைஞரை பற்றி எழுதும் பொழுதெல்லாம், அவர் ஒரு கரிநாய் என்று ஒரு சொரிநாய் பின்னால் வந்து சொல்லிகொண்டே இருக்கின்றது


கலைஞர் நல்லவரா? கெட்டவரா? எனும் நாயகன் வசனம் எல்லாம் பேச வேண்டியதில்லை


ஒரு மாநிலத்தை எப்படி ஒரு சாதாரண எழுத்தாளன் பாதிக்கமுடியும்? எப்படி ஆட்சியினை மாற்றி அமைக்க முடியும் என செய்து காட்டியவர் அவர்





அவரை மனதார ரசித்தே பல மாநிலங்கள் உணர்வே பெற்றன. இந்தியா முழுக்க பலருக்கு வழிகாட்டி நிச்சயம் அவர்தான்

அவ்வகையில் பலமாநிலங்களில் அவருக்கான அபிமானம் இன்றளவும் உண்டு.

கடந்த 50 ஆண்டுகளாக அவரால் உருவாக்கபட்டவர்கள்தான் இம்மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கின்றார்கள், இன்று ஆளும் நடராஜன் வரை, அவர் பின்னால் தமிழ் வாழ்க என கோஷமிட்டவரே

அதாவது உரிமை குரலை எப்படி எழுப்புவது என தமிழகத்திற்கு சொல்லிகொடுத்ததே கலைஞர்தான், அந்த தைரியம் அவரால்தான் ஊட்டபட்டது

இன்னும் 100 ஆண்டுகளுக்கு அவரால் உருவாக்கபட்டவர்கள் தான், அவரின் பாதிப்பில் வந்தவர்கள்தான் தமிழநாட்டினை ஆளமுடியும்

கலைஞரின் பாதிப்பின்றி இனி தமிழக அரசியல் அமையாது

அப்படி ஒரு நிலைவரினும், இந்த இடத்தில் கலைஞர் எப்படி சமாளித்தார் என அவரைத்தான் திரும்பி பார்ப்பார்கள்

இது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று

ஆக பெரும் மாற்றத்தை இந்த தமிழகத்தில் கொடுத்த தலைவர் அவர், காமராஜரை எதிர்த்ததை விட அவர் பெரும் தவறு ஏதும் செய்யவில்லை

ஆனால் கலைஞர் இல்லாவிடாலும் , காமராஜரை வீழ்த்த இந்திரா இன்னொருவரை நிச்சயம் தயாரித்திருப்பார், அது இன்னமும் மோசமானதாக உருவாகியிருக்கும்

கலைஞர் அரசியலுக்கான சில தன்மைகளை மாற்றினார் என்றால், இந்திரா செய்தது எம்மாதிரி அரசியல்? பாஜக செய்தது எம்மாதிரி அரசியல்

அரசியல் அப்படித்தான், அதனை முன்கூட்டியே கணித்து களமிறங்கிவர்தான் கலைஞர்

அவரை முழுவதுமாக ஏற்றுகொள்ளமுடியாவிட்டாலும், அவரை நிராகரித்துவிட முடியாது

ஒரு இடத்திற்கான தேவை தமிழகத்தில் இருந்தது, காலம் அதனை கலைஞராக உருவாக்கிகொண்டது

அவரை குருவாக கொண்டுதான் ஆனானபட்ட எம்ஜிஆர் கூட செயல்பட்டார், கலைஞர் மீது அவருக்கொரு மரியாதை என்றும் இருந்தது

கலைஞர் இல்லாவிட்டால் தன் அரசியல் வாழ்வு இல்லை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் ஜெயலலிதா

அவரை துச்சமாக மதித்தவன் எல்லாம் வைகோ போல பைத்தியமானார்கள், அல்லது பிரபாகரன் போல அழிந்தார்கள்

இது பெரும் உண்மை, வரலாற்றை புரட்டினால் அந்த சொரிநாய்க்கு விளங்கும்

சொரியாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எது என தெரியாது என்பார்கள், அது உண்மை போலிருக்கின்றது

இன்னும் வந்து கரிநாய் என அந்த சொரிநாய் ஊளையிட்டால் அது விரட்டபடுவது உறுதி

அவரின் சாதனையில் கோடியில் ஒருபங்கினையவது செய்துவிட்டு சொரிய தொடங்கு முடியாதல்லவா?

அதனால் மிஸ்டர் சொரிநாய், இத்தோடு உன் சொரியலை நிறுத்துவது நல்லது




 

 



 

No comments:

Post a Comment