Friday, March 31, 2017

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு கேமரா

பணப்பட்டுவாடாவை தடுக்க ஆர்.கே.நகரில் கண்காணிப்பு கேமரா


வைக்க வேண்டிய அப்பல்லோவில் இல்லாத கேமரா, போயஸ்கார்டனில் இல்லாத கேமரா, ஆர்கே நகர் எங்கும் வைக்கபடுமாம்


ஏதோ தெருவில் தள்ளுவண்டியில் வைத்து பணம் கொடுப்பது போலவும், கேமராவில் அதனை பார்த்துபிடிப்பது போலவும் செய்து கொண்டிருக்கின்றார்கள்




செய்திதாளுக்குள் கவர் வைத்து வீசுவது, போன் பில், கரண்ட் பில், மளிகை பில் கட்டுவது, காய்கறி கூடைக்குள் பணம், பூக்கட்டுக்குள் பணம் என‌ என 2000த்திலே செய்தார்கள்


2017ல் எவ்வளவு வளர்ந்திருப்பார்கள்?


இணையம் இவ்வளவு வந்தபின் இருந்த இடத்தில் இருந்தே கொடுக்கமுடியாதா?


மருத்துவமனை, பள்ளிகளில் பில் கட்டும் அளவிற்கு நிலமை சென்றாயிற்று, பணம் புழங்கும் எல்லா இடத்திலும் புகுந்தாகிவிட்டது


நிலமை இப்படி இருக்க , இவர்கள் நடுதெருவில் கேமரா வைக்கின்றார்களாம்


வைக்கட்டும், வேட்பாளர்கள் அந்த கேமரா அருகில் வந்து மர்மமான புன்சிரிப்போடு ஒரு வணக்கம் வைப்பார்கள் பாருங்கள்..


தேர்தல் கமிஷனுக்கு அதனை விட கடும் எரிச்சல் ஏதுமிருக்காது.


இது இருக்கட்டும்


தேர்தலில் வெல்லபோவது யார்? என பெட் கட்டும் சூதாட்டம் சூடு பிடித்திருக்கின்றதாம்


இங்கே கட்சிகளிடம் வாங்கி அதனை சூதாட்டத்தில் கட்டும் விளையாட்டும் தொடங்கியாயிற்று


உண்மையில் காவல்துறையின் நிலை பரிதாபம்


பணம் கொடுப்பதை தடுக்குமா? கொடுக்கும் பணத்தை வைத்து ஆடுவதை தடுக்குமா? அது தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது






சர்ச்சையில் சிக்கிய‌ தலைமைச் செயலர் ராம மோகன ராவுக்கு மீண்டும் பதவி


ஊழல் அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பதவிக்கு வரும் மாநிலத்தில், ஊழல் அதிகாரிகள் மறுபடி பதவிக்கு வருவதில் என்ன ஆச்சரியம்?


இப்படித்தான் நடக்கும்..








No comments:

Post a Comment