விராட் கோஹ்லிக்கு பத்மஷ்ரி விருது
கோஹ்லி திறமையான ஆட்டக்காரர், ஆனால் ஏன் இவரை விட சிறந்த ஆட்டக்காரரான டோனிக்கு அந்த விருது ஏன் கிடைக்க்கவில்லை?
டோனிக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏதோ உரசல் இருப்பது அவ்வப்போது தெரிகின்றது, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு, கேப்டன் பதவியிலிருந்து விலகல் என அந்த விஷயங்களில் நன்றாக தெரிகின்றது
டோனியின் காலங்கள் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவ் காலத்திற்கு அடுத்த பொற்காலம் என்பதனை பின்பு வரலாறு சொல்லும்..
டோனிக்கும் ஒரு பத்மஷிரி கொடுத்திருக்கலாம், நிச்சயம் கொடுத்திருக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் போர்டு வீரர்கள் கிரிக்கெட் ஆடுகின்றார்களோ இல்லையோ, அந்த போர்டில் அரசியல் மிக நன்றாக ஆடுகின்றது என்பது மட்டும் தெரிகின்றது
ஆனானபட்ட கபில்தேவினையே கண்ணீர் சிந்த வைத்த அந்த அரசியல் அப்படித்தான் இருக்கும்
நாட்டில் எத்தனையோ சீர்திருத்தங்களை கொண்டுவரும் மோடி, இந்த பெரும் பணம் விளையாடும் தனியார் அமைப்பான கிரிக்கெட் போர்டு பக்கம் மட்டும் செல்லவே மாட்டார்..
மோடி என்றல்ல, எந்த பிரதமரும் செல்லமாட்டார்..
அதன் சக்தி அப்படி..
No comments:
Post a Comment