Friday, March 24, 2017

ஈழத்தில் ரஜினிகாந்தை வைத்து வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை - திருமாவளவன்.

https://youtu.be/3oaCCqw1y-s




ஈழத்தில் ரஜினிகாந்தை வைத்து வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை - திருமாவளவன்.


ஆமாம், ஓடிசென்று பிரபாகரனை அண்ணா என இவர்தான் கட்டிபிடித்தார், பின்பு ஐயா என ராஜபக்சேயுடன் சிரித்தும் நின்றார்


இப்படி இருவரையும் சந்தித்தால் அது சரி (இதனால் ஈழமக்களுக்கு என்ன நன்மை, ஒன்றுமே இல்லை)





ஆனால் இருவரும் வேண்டாம், அழிந்த மக்களுக்கு வீடு வழங்கலாம், அவர்கள் அமைதியாக வாழட்டும் என ரஜினி சென்றால் அது ஏமாற்றுவேலை

இந்த திருமா உண்மையான ஈழதமிழர் அனுதாபி என்றால் இப்பொழுது சென்று அம்மக்களை வாழ்த்தி குடியிருக்க வைக்கலாம் அல்லவா?

செய்யமாட்டார், இது எல்லாம் ஏமாற்றுவேலை அல்ல, மாறாக ரஜினி கிளம்பினால்தான் ஏமாற்றுவேலையாம்..

அடுத்த வீடு தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா, வீடிழந்த மக்களுக்கு வீடு வேண்டும் என நினைப்பவன் மனிதனா?

திருமா முதல் ரகம் அரசியல்வாதி ரகம் , லைக்காவும் ரஜினியும் இரண்டாம் ரகம், மனித ரகம்








முதலில் திருமா தமிழ்நாட்டு தமிழர்களுக்கு என்ன செய்தார்? தன்னை நம்பிய தாழ்த்தபட்ட மக்களுக்கு என்ன செய்தார்?


தாழ்த்தபட்ட மக்களின் பிரதிநிதி என்றால் அவர் மலையக தமிழருக்கு சார்பாக புலிகளை கண்டித்திருப்பார், இப்படி புலிகொடி தூக்கமாட்டார்,


ஆக இவரின் தாழ்த்தபட்டோரின் கொள்கை கேள்விக்குள்ளாகின்றது, தாழ்த்தபட்ட எந்த தமிழனும் யாழ்பாணத்தானுக்கு வால் பிடிக்கமாட்டான்...





தமிழர் நலம் பெரிதென்றால் இவர் தமிழ்நாட்டில் சாதிவாரி கட்சி நடத்திகொண்டிருக்கமாட்டார்

ஆக இவர் தமிழக தமிழருக்கும், தமிழக தாழ்த்தபட்டோருக்கும் ஒன்றும் உருப்படியாக செய்தவரில்லை

தமிழுக்கும் ஏதும் செய்ததாக தெரியவில்லை..

இதில் ஈழ தமிழர்களுக்காக இவர் கத்த என்ன இருக்கின்றது? ரஜினியினை கண்டிக்க என்ன உரிமை இருக்கின்றது?

இவர் எப்படி யாருக்கும் ஒன்றும் செய்யவில்லையோ அப்படி ரஜினியும் தமிழருக்காக ஏதும் செய்ததாக தெரியவில்லை

பின் இவர் சென்றால் என்ன? அவர் சென்றால் என்ன?

ஆனால் ரஜினி செல்வது நல்ல காரியத்திற்காக, திருமா போல எறியும் வீட்டில் புடுங்குவதற்கு அல்ல..

ரஜினியினை திருமா எச்சரிப்பது, "என் பிசினஸில் நீ ஏன் தலையிடுகின்றாய்..." என்பது போலவே தோன்றுகின்றது





 


 



 

No comments:

Post a Comment