Monday, March 20, 2017

நடிகை சாவித்திரி வாழ்க்கை திரைப்படமாக...

https://youtu.be/FaCT3T4H0zk





தமிழில் எத்தனை நடிகைகள் நடித்தாலும், தனக்கென தனி இடம் பெற்றிருந்தவர் சாவித்திரி


அவரின் வாழ்வு அவ்வளவு விசித்திரமானது, அவரை போல வாழ்ந்தவருமில்லை, அவரை போல வறுமையில் வாடியவருமில்லை


ஆயிரம் திருப்பங்கள் நிரம்பிய மிக வித்தியாசமான வாழ்வு அவருடையது, வெறும் 45 வயதிற்குள்ளே வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் பார்த்துவிட்டு மறைந்தவர் அவர்




இன்று அவரின் வாழ்வினை திரைபடமாக எடுக்க போகின்றார்களாம்


நயந்தாராவும், சமந்தாவும் நடிக்க போகின்றார்களாம்


நயன் சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சாவித்திரி பாத்திரத்திற்கு உருவ ஒற்றுமையுடன் பொருந்துவாரா என்பது நிச்சயம் முடியாது


சமந்தா ஒரு பொம்மை, அவரெல்லாம் சாவித்திரியின் கண்களுக்கு கூட நடிப்பினை கொடுக்கமுடியாது


சாவித்திரி பாத்திரத்திற்கு நயனையும், சமந்தாவினையும் எப்படி யோசித்தார்கள் என்றே தெரியாது


இன்றைய நிலையில் சாவித்திரி கதைக்கு, அவரின் திறமையோடும், உருவத்தோடும் ஒரு நடிகை பொருந்தமுடியுமென்றால் அது குஷ்பூ மட்டுமே


மிக கச்சிதமாக அந்த பாத்திரத்திற்கு பொருந்துவார்


நான் என்ன சொல்வது, நீங்களே கற்பனை செய்யுங்கள் மிக அருமையாக பொருந்துவார்


நான் குஷ்பூ ரசிகன் என்பதற்காக அல்ல, அந்த சாவித்திரிக்கு இனி திரையில் உருவம் கொடுக்க குஷ்பூவினை தவிர யாராலும் முடியாது


இதோ பாசமலர் படம் ஓடிகொண்டிருக்கின்றது, சாவித்திரி அற்புதமாக நடித்துகொண்டிருக்கின்றார்.


நயன், சமந்தா எல்லாம் அந்த வேடத்திற்கு நினைத்தாலே சிரிப்புத்தான் வருகின்றது


அந்த நடிப்பினை அவரின் தோற்றத்திற்கு இப்போதைக்கு குஷ்பூவினை தவிர யாராலும் நிரப்ப முடியாது..











No comments:

Post a Comment