Thursday, March 30, 2017

சொன்னார்கள் : வைகோ, வாசன், திருநாவுக்கரசு

ம.தி.மு.க. நடத்தும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்


மதிமுகவிற்கு எதற்கு ராமசந்திரன் நூற்றாண்டு விழா? அவர் என்ன மதிமுக நிறுவணரா? புரவலாரா? தலைவரா?


தற்காலிக உறுப்பினராக கூட ராமசந்திரன் மதிமுகவில் இல்லையே பின்ன ஏன்?




விஜயகாந்த் மருத்துவமனைக்கு சென்றதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை, இந்த மனிதரையா நம்பினோம் என நினைத்தால் நெஞ்சு வலி வராதா?


அதிமுகவிற்கு கொள்கையே இல்லை,


மதிமுகவின் ஒரே கொள்கை யாருக்காவது அஞ்சலி செலுத்திகொண்டே இருப்பது, அப்படி இன்று ராமசந்திரனுக்கு


விரைவில் அதிமுகவிற்கு.....






சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்: வாசன்


ஆமாம், அதில் ஆட்சியினை கைபற்றும் வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக உள்ளது. அதனால் தேர்தலை நடத்துவதில் இவருக்கு அவசரம்.


தேர்தல் எப்பொழுது நடந்தால் இவருக்கு என்ன?,




அதில் இவர் கிழித்தது கிழிக்க போவது என்ன?






"ஹெச்.ராஜாவை அடக்கி வையுங்கள்" பாஜகவினை எச்சரிக்கின்றார் திருநாவுக்கரசர்


ஆமாம், முன்பு பாஜகவில் இவரை எப்படி அடக்கி வைத்தீர்களோ, அப்படி அந்த ஹெச்.ராஜாவினையும் அடக்கி வையுங்கள்..


அன்று இவரை அடக்கிவைத்துவிட்டு இன்று எச்.ராசாவினை பேசவிடுவது என்ன நியாயம்?




அது சரி திருநாவுக்கரசர்? உங்கள் கட்சியில்தான் யாரும் எதற்கும் அடங்கமாட்டீர்களே, அவரைப்போல சீறிபார்த்தால்தான் என்ன?







 



No comments:

Post a Comment