"அன்பே வா" படத்தில் கையில் சூட்கேசும், ஒரு கம்பும் தலையில் தொப்பியுமாக ராமசந்திரன் பாடுவார்
காலங்கள் கடந்தாலும் எவ்வளவு ஆச்சரியமாக காட்சிகள் பொருந்துகின்றன?
இப்பொழுது அதே தொப்பி, ஆனால் மறைமுகமாக சூட்கேஸ், அவ்வப்போது சிலருக்கு கம்பு அடி என அந்த கோஷ்டி ஆர்.கே நகரில் சுற்றுகின்றது
4 வரிகளோடு பாடல் முடிந்தால் அதிமுகவினருக்கு நல்லது, தொப்பி சூட்கேஸ் சகிதம் "எங்கும் பணமழை பொழிகின்றது" என சுற்றி சுற்றி பாடலாம், தொப்பி சகிதம் பாடல் களை கட்டியிருக்கும்.
ஆனால் ராமசந்திரன் தெரியாமல் கூட இரு வரிகளை பாடியல்லவா தொலைத்திருக்கின்றார்,
"உதய சூரியனின் பாதையிலே
உலகம் விழித்துகொண்ட வேளையிலே,
நல்லவர் எல்லாம் நலம்பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது" என வரும் வரிகள் அவை
(அது ராமசந்திரன் திமுக காலம், உதய சூரியனின் வரி பின் புதிய சூரியன் என திருத்தபட்டது)
அதனால் அந்த பாடலை அதிமுகவினர் பாடவே மாட்டார்கள், அப்படி பாடினால் பாதிக்கு பின் திமுக தொடர்ந்து பாடும்
பிரச்சாரம் பாட்டுக்கு பாட்டு போட்டியாகும், அதனால் அதிமுகவினருக்கு அந்த பாடல் தந்திரமாக மிஸ்ஸிங்..
எப்படியோ அதே தொப்பி, சூட்கேஸ் ஆங்காங்கே மிரட்டல் (கம்பு) என அதே பாடல்காட்சிகள் ஆர்.கே நகரில் களைகட்டுகின்றது.
எங்கும் பணமழை பொழிகின்றது...
No comments:
Post a Comment