Friday, March 31, 2017

ஈழதமிழர்களுக்கு வாய்க்கரிசி போட இவர்கள் ரெடி..

வறட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பாகிஸ்தான் அரசு 35 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை அனுப்பி வைத்தது.


இலங்கை மிக செழிப்பான நாடு, எல்லா பயிறும் செழித்து வளரும் வளமான பூமி, மகாவலி போன்ற ஆறுகள் ஏராளமான குளங்கள் எல்லாம் உண்டு


அதுவும் வன்னிபகுதி அக்கால‌ தமிழக தஞ்சைக்கு நிகரானது




கடும் யுத்தம் அவர்களின் பல விவசாய நிலங்களை பாழாக்கிற்று, இனி அவை பழைய உருபற்று வர நெடுங்காலம் ஆகும்


பற்றாக்குறைக்கு தமிழகத்தை போலவே அங்கும் கடும் வறட்சி தாக்கிற்று, இதனால் பெரும் உணவுதட்டுப்பாடு நிலவுகின்றது,


இந்நிலையில்தான் பாகிஸ்தான் அரிசியினை அள்ளி கொடுத்து உதவுகின்றது, இவ்வளவிற்கும் இஸ்லாமியர்களை அவ்வளவாக கண்டுகொள்ளாத நாடு இலங்கை, இருந்தும் ஏன்?


அது அரசியல், உலக அரசியல், அது அப்படித்தான்


பாகிஸ்தான் அரிசியில் யாருக்கும் பங்கு போகும்?


தொப்புள்கொடி உறவான ஈழதமிழர்களுக்கும் அந்த உதவி செல்லும்


ஆக ஈழதமிழருக்கும் உணவளிக்கின்றது பாகிஸ்தான், தமிழகத்தில் சத்தமில்லை


இதே அரிசியினை கப்பல் நிறைய‌ மூட்டைகளுடன் இந்தியா அனுப்பியிருந்தால், கூடவே ரஜினியினையும் அனுப்பியிருந்தால் இந்த திருமா முதலான‌ தமிழ் உணர்வாளர்கள் சும்மா இருப்பார்களா?


வீடு கொடுத்ததை தடுப்பது போல, அரிசி கொடுப்பதையும் தடுப்பார்கள்,


ஈழதமிழர்களுக்கு வாய்க்கரிசி போட மட்டும் இவர்கள் ரெடி..


ஈழவிவகாரங்களிலிருந்து இந்தியாவினை தனிமைபடுத்தும் ஒருவித செயலைத்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்


புலிகளும் அதனைத்தான் செய்து எல்லாம் நாசமாக்கி எல்லாவற்றையும் அழித்தார்கள்..


இந்தியா விலக விலக சீனாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவுமே அங்கு கால்பதிக்கும் அது இந்தியாவிற்கு நல்லதல்ல‌


ஆக இந்த திருமா முதல உணர்வாளர்கள் செய்வது தேசதுரோகம் என்பதில் சந்தேகமே இல்லை..



No comments:

Post a Comment