Thursday, March 30, 2017

கமலஹாசனும் , ரஜினியும் கோழைகள் : சு.சாமி





கமலஹாசனும் , ரஜினியும் கோழைகள் : சு.சாமி


ரஜினி பயந்தாங்கொள்ளி என இவர் சொல்வாரானால் மிக தாமதமாக உணர்ந்துகொண்டவர் என்றே பொருள்.


ஆனால் அந்த கோழை வீட்டுக்கு மாவீரன் மோடி , அதிரடி வீரன் அருண் ஜெட்லி, உட்பட எல்லா பாஜகவினரும் ஏன் செல்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை





கமலஹாசனை இவர் ஏன் கோழை என்கின்றார்? ஒரு பிராமணன் பெரியார் கருத்துக்களை பேசினால் "அக்ரஹார" அகராதியில் கோழை என பெயர்.

மன்சாட்சிக்கு அஞ்சுபவன் கோழையாம்..

சரி ரஜினியும், கமலஹாசனும் கோழை என்றால், ராஜிவ் கொலைவழக்கிலும் இன்னும் பல வழக்கிலும் மர்மமாக நழுவி ஓடிய இவர் யார்?

அவசரமாக ஸ்பெக்ட்ரம் வழக்கினை ஆரம்பித்துவிட்டு, இன்று வழக்கு தோற்கபோகின்றது என தெரிந்ததும், அந்த பேச்சினை அறவே விட்டுவிட்ட இவர் யார்?

சசிகலாவினை எதிர்த்துவிட்டு இன்று அவரின் முழுநேர பாடிகாட்டாக மாறியிருக்க்கும் இவர் யார்?

கமலஹாசன் மீது வழக்கு தொடுக்கும் தமிழகத்தில்தான், இம்மாதிரி பொறுக்கிகள், கோழைகள் என சொல்லிகொண்டு திரிபவர் மீது ஒரு வழக்குமில்லை..

ரஜினி கோழையாக இருக்கட்டும், ஆனால் டெல்லி மாவீரர்கள் அவரை சுற்றி சுற்றி வந்து காலில் விழுவது ஏன்?

ரஜினி கோழைதான், ஆனால் அந்த கோழையிடம் சென்று அடிக்கடி ஆதரவு கேட்கும் பாஜக எவ்வளவு கோழை கட்சியாக இருக்கவேண்டும்









"லைக்கா’ நிறுவனத்தால் 150 வீடுகள் கட்டப்படவில்லை, குறவான வீடுகள்தான் வீடுகள்தான் கட்டப்பட்டது"- திருமாவளவன்

சரி உங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை வீடு கட்டி கொடுத்தது??

ஒரு செங்கல் அல்லது ஒரு கரண்டி சிமெண்ட் கொடுத்திருப்பீர்கள்?




 

 



 

No comments:

Post a Comment