மதவெறி உச்சத்திற்கு போனால் எப்படி நடப்பார்கள் என்பதற்கு ஐஎஸ் இயக்கம் எடுத்துகாட்டு
எப்படி பேசுவார்கள் என்பதற்கு எச்.ராசா என்பவர்தான் பெரும் உதாரணம்.
சோனியாகாந்தி பற்றி என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார், அந்த பெண் ஏதாவது அரசு பதவியில் இருந்தவரா? நாட்டை ஆண்டவரா?
மத சம்பந்தமான எந்த கருத்தினையாவது அவர் சொல்லியிருக்கின்றாரா?
கடந்த ஆட்சியின்பொழுது விவசாயிகளுக்கான கடனை மன்மோகன்சிங் அரசு தள்ளுபடி செய்யும்பொழுது எந்த விவசாயி சோனியாவிடம் சென்று கத்தமுடியும்?
அப்படி அறிவுகெட்டு கத்த அவர் என்ன எச்.ராசாவா?
நொடிக்கொருமுறை சோனியா அந்நிய தேசத்தவர் என சொல்லிகொண்டே இருக்கின்றார் அய்யோ பாவம்.
மிஸ்டர் ராசா, ஆனானபட்ட சிவபெருமானே கையால மலை எனும் அந்நிய தேசத்தில் இருந்துதான் தேற்கே வந்திருக்கின்றார், முருகனும் அப்படித்தான் வந்திருக்கின்றார்
ராமனின் குருநாதர் விஸ்மாமித்திரரும் இந்தியர் அல்ல என்கின்றது புராணம்
அவ்வளவு ஏன்? ராமன் பெண்ணெடுத்த சீதையே பர்மா அல்லது தாய்லாந்து பக்கம் என்கின்றது புராணம், சீதை ஒரு அந்நியர் என சொல்லிவிடலாமா?
இந்தியபெண்ணை மணக்காமல் அந்நிய பெண்ணை மணந்த ராமனுக்கு ஏன் இங்கே கோவில் என சொல்லிவிடலாமா?
கனத்த சங்கிலியால் கட்டி, நல்ல சிகிச்சைக்கு இவரை அனுப்புவது நலம், மனிதருக்கு முற்றிகொண்டிருக்கின்றது
இவரை எல்லாம் வைத்து தமிழகத்தில் கலகம் செய்யலாமே ஒழிய கட்சி வளர்க்கமுடியாது
காங்கிரஸ்காரர்கள் கோபத்தில் இருக்க பாஜகவினர் இவரை நினைத்து தலையில் அடித்துகொண்டிருக்கின்றார்கள்
அவர்கள் நிலையும் பரிதாபம் தான், கட்சியில் இருப்பதே சிலர் அதில் இந்த எச்.ராசாவினையும் விரட்டிவிட்டால் இருப்பது யார்?
அதுவும் "என்னது?? எச்.ராசா இருந்த கட்சியில் நாங்கள் இருந்தால் எங்களை பற்றி என்ன நினைப்பார்கள்?.." என்ற பயத்தில் யார் அந்த கட்சிக்கு வருவார்???
No comments:
Post a Comment