Wednesday, March 29, 2017

மனுஷ்ய புத்திரன் வீடு தேடுகின்றாராம்...

17626114_10208778435033336_8159996164483827134_n.jpg


மனுஷ்ய புத்திரன் வீடு தேடுகின்றாராம், அவருக்கு வீடு கொடுக்க ஒப்புகொண்டவர்கள் எல்லாம் அவர் இஸ்லாம் என தெரிந்தபின் மறுத்துவிடுகின்றார்களாம்


இப்படி வழக்கமான தன் 1 கிலோ மீட்டர் ஸ்டைலில் அழுதிருக்கின்றார்,


நான் இஸ்லாமியன் என்பதால் வீடு கிடைக்கவில்லை என சொன்னால் விஷயம் முடிந்துவிடும், அதற்கு 10 பக்கம் இழுப்பு




விஷயம் என்னவென்றால், தன் சொந்த பெயரான சாகுல் ஹமீதினை மறைத்து, மனுஷ்யபுத்திரன் மானிட மகன் என உலகெல்லாம் சொன்னது இவர்தான்


அன்றே நான் சாகுல் ஹமீது என்றால் இவ்வளவு சிக்கல் வந்திருக்குமா?


பெயரையே மறைத்தவன் இன்னும் என்னவெல்லாம் மறைத்தானோ எனும் அச்சத்தில் வீடு கொடுக்கமாட்டேன் என்கின்றார்கள்.


பெயரை மறைத்து இங்கு சுற்றியிருக்கின்றான் என்றால் ஐஎஸ் இயக்கத்தவனாக இருக்கலாமோ எனும் அளவிற்கு அலறியிருக்கின்றார்கள்..


இது புரியாமல் இவர் ஏதோ சென்னையில் இஸ்லாமியருக்கு வீடே கிடைக்காது என்பது போல பேசிகொண்டிருக்கின்றார்?


என்னா வில்லத்தனம்


மனுஷ்ய புத்திரன் என்றால் மானிட மகன் என பொருள்


பறவைக்கு கூடு உண்டு, நரிக்கு வளையுண்டு, மானிட மகனுக்கு தலைசாய்க்க இடமில்லை என இயேசு அன்றே சொல்லிவிட்டார்


மானிட மகன் என்றால் அப்படித்தான், வீடே கிடைக்காது என இயேசுவே சொல்லிவிட்டார்.


இவரை பார்த்தவுடன் வீட்டு முதலாளிகள் மனதில் என்ன தோன்றும்? தீவிரவாதி என்றா தோன்றும்?


இவர் டிவியில் எல்லோருடனும் வம்பு இழுப்பவர் ஆயிற்றே, அப்துல் கலாமினையே விமர்சித்தவர் ஆயிற்றே, வீடு கொடுத்து சனியனை இழுக்கலாமா? கண்ணாடி கதவு உடைந்தால் யார் பொறுப்பு என சிலர் யோசிக்கலாம்


முக ஸ்டாலினின் நிழலாக அலைகின்றார், இனி திமுக ஆட்சி என்கின்றார்கள், அப்படி இவனுக்கு கொடுத்துவிட்டால் வீடு திரும்ப வருமா? காலி செய்வானா? என சிலர் யோசிக்கலாம்.


வீட்டுமுதலாளிகள் இப்படி யோசிக்க...


திமுக ஆட்சியில் அரசு ஒதுக்கும் வீட்டில் குடியேற இப்போதே எனக்கு வீடு இல்லை, கிடைக்கவும் இல்லை என இவரே முன்பதிவு செய்யலாம்


இப்படி ஏராளமான வாய்ப்புகள் இவரின் அலறல் பின்னால் இருக்கின்றது, நிச்சயமாக இஸ்லாமியன் என்பதற்காக அல்ல‌...


ஆக இவர் இப்படி சொல்லி தந்திரம் செய்கின்றாராம்...


சக்கர நாற்காலியில் அமர்ந்தவெல்லாம் கலைஞராக முடியுமா?



No comments:

Post a Comment