நடிகர் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் : எஸ்.ஏ சந்திரசேகர்
ஏன் வந்து பார்த்தால்தான் என்ன?
பெரும் முதலை கட்சிகளே எப்படி அரசியல் செய்யலாம் என்ன மண்டையினை பிய்த்துகொண்டிருக்கும் பொழுது விஜய் வந்து என்ன செய்துவிடுவார்?
விஜயகாந்த் படும்பாடு தெரிந்திருக்குமோ?
திடீரென இவர் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என சொல்லவேண்டிய அவசியம் என்ன? அதுவும் இடைதேர்தல் நேரத்தில்?
யாரும் பிரச்சாரத்திற்கு அழைத்திருக்கலாம், அதனால் பொதுவாக இப்படி இவர் சொல்ல வாய்ப்பிருக்கின்றது
ம்ம்ம்ம் தேர்தல் முடிந்துவிடும், விஜய்படம் தொடர்ந்து வரவேண்டும் அல்லவா?
இப்பொழுது கொஞ்சநாளாகத்தான் அவர் படங்கள் சிக்கலில்லாமல் வந்துகொண்டிருக்கின்றதது,
இனி என்னாகுமோ???
குஷ்பூவினை நிறுத்தியிருந்தால் ஆர்.கே நகரில் காங்கிரஸ் பெருவெற்றி பெறும், நிச்சயமாக தினகரனுக்கு பெரும் சவாலாக அவர் இருந்திருப்பார்
தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ந்துவிடவே கூடாது என கங்கணம் கட்டி காத்திருக்கும் காங்கிரசார் எப்படி குஷ்பூவினை நிறுத்துவார்கள்?
பெரும் வரலாற்று தவறினை தமிழக காங்கிரஸ் செய்துகொண்டிருக்கின்ரது..
No comments:
Post a Comment