Thursday, March 30, 2017

மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன்


17629891_10208784512705274_2279163978110491933_n.jpg


மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன் அவர் ஸ்டைலில் நிறைய புலம்பியிருக்கின்றார், இப்படி முடிக்கின்றார்


"இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள்.


ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்."




மிஸ்டர் ஜெயமோகன் அதனை நாங்கள் திருப்பி கேட்கின்றோம்


"திப்பு சுல்தான் காலத்தில் வெள்ளையானால் வளர்க்கபட்ட வெறி, தேசம் பிரிந்து, காந்தி கொலையால் அடக்கபட்ட அந்த வெறி, இந்திரா காலத்திற்கு பின் வளர ஆரம்பித்து, பின் ,மசூதியினை இடித்து கடந்த 30 ஆண்டுகளில் பெரும் கலவராமாகி இன்று மாட்டுகறி முதல் கல்வி என‌ எல்லாமே பிரச்சினை என வளர்ந்து நிற்கின்றது


துரதிருஷ்டவசமாக அவர்களே இந்துக்களின் முகமாக அறியபடுகின்றனர், போகிற போக்கில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் , தேவதாசி போன்ற முறைகளை கொண்டுவந்து விடுவார்களோ எனும் அச்சம் ஏற்படுங்கின்றது


இத்தேசத்தின் ஒவ்வொரு முஸ்லீமும், கிறிஸ்தவனும், புத்தனும் அந்த பழைய இந்துக்களுக்காக ஏங்கி கொண்டிருக்கின்றான்"


உங்களுக்கு மட்டும்தான் சொல்ல தெரியுமா?
மற்றவர்களுக்கு சொல்ல தெரியாதா?



No comments:

Post a Comment