கமலஹாசன் மீது நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்குபதிவு
அதாவது மஹாபாரதம் பற்றி கமலஹாசன் அவதூறு பேசிவிட்டாராம், உடனே வழக்கு தொடர்ந்துவிட்டார்கள்
ஒரு காலத்தில் பெரியாரும் அவரின் அடிப்பொடிகளும் பேசிய அளவிற்கு எல்லாம் கமலஹாசன் பேசவில்லை, இவர்களுக்கு அந்த பேச்சுக்கள் எல்லாம் தெரியாது போல, தெரிந்தால் ஓடி சென்று கன்னியாகுமரி கடலுக்க்குள் குதித்து செத்துபோவார்கள்
பெரியார் கேட்டது அம்மாதிரியான கேள்விகள், இப்பொழுது பிரச்சினை பெரியார் அல்ல, கமலஹாசன்
கமலஹாசனை பலர் கவனித்துகொண்டே இருப்பார்கள், ரசிப்பார்கள் ஆனால் எதிர்ப்பு எனும் பெயரில் வேறு மாதிரி காரியம் சாதிப்பார்கள்
அதாவது அவர் படத்தால் பிரச்சினை வரலாம், ( பிரச்சினை நிச்சயம் இவர்களால்தான் வரும் என்பது வேறுவிஷயம்) எங்களுக்கு போட்டு காட்டிவிட்டு ரிலீஸ் செய்யட்டும் என சவால் விடுவார்கள்
கமலஹாசனும் திரையிட்டு காட்டுவார், இவர்களோ முதல் காட்சிக்கு முந்தைய காட்சியினை இலவசமாக பார்த்துவிட்டு எப்படி எங்கள் சாமார்த்தியம் என கியூவில் நிற்கும் ரசிகர்களை ஏளனமாக பார்ப்பார்கள்
ஒரு பைசா செலவில்லாமல் முதன் முதலில் கமலஹாசன் படம் பார்ப்பதற்கு அவரை படாத பாடு படுத்துவார்கள்,
பெரும் அறிவாளிகள் அப்படித்தான்
இப்பொழுது சிலருக்கு கமலஹாசனை அருகிருந்து பார்க்கும் ஆசை வந்திருக்கின்றது, சென்னைக்கு சென்று அவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி, சே எவ்வளவு அலைச்சல், செலவு?
அவர் செலவிலே அவர் வந்து நம்மை பார்க்குமாறு செய்துவிட்டால் என்ன என யோசித்திருக்கின்றார்கள்
வசமான இடம்பார்த்து கமலஹாசனை கோர்ட்டுக்கு இழுத்தாயிற்று, இனி அவர் வந்து நிற்கும்பொழுது கண்குளிர பார்த்துகொள்ளலாம்
கேஸ் வாபஸ் என சொல்லி செல்பியும் எடுத்துகொள்ளலாம்
எப்படி ஐடியா பார்த்தீர்களா?
இம்மாதிரியான ஐடியாக்கள் எல்லாம் தோழி Uma Magi அவர்களுக்கு வராது, அப்பாவியான அவர் காலமெல்லாம் "ஐ லவ் யூ கமலஹாசன்", "வான்ட் டு சீ யூ டார்லிங்' என சொல்லிகொண்டே இருக்க வேண்டியதுதான்
இப்படி எல்லாம் சிந்திக்க ஒரு குருட்டு குறுக்குமூளை வேண்டும், தோழி Uma Magi நம்மை போல அப்பாவி என்பதால் இப்படி எல்லாம் சிந்திப்பதில்லை,
சிந்திக்கவும் தெரியாது.
No comments:
Post a Comment