Friday, March 31, 2017

ஆந்திர செம்மர கடத்தல் கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன்




17626505_10208789536990878_945410918179769276_n.jpg


ஆந்திர செம்மர கடத்தல் கும்பல்கள் பல உண்டு, அவற்றில் ஒரு கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன்


பெரும் கடத்தல் தலைவன் இவனே, இவனை 2015ல் ஆந்திரபோலிஸ் கைதுசெய்துவிட்டது, ஆனாலும் கடத்தல் தொடர்ந்தது


எப்படி என போலிஸ் விசாரித்தபொழுதுதான் லட்சுமணனுக்கு கல்கத்தா காதலி இருப்பதும், அவள் கேங் லீடரான கதையும் தெரிந்தது





அவள் கல்கத்தா நடிகை சங்கீதா, செம்மர கடத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது,

கடத்தல் ராணியாக மாறினாள் சங்கீதா,போலிஸ் வலை விரித்தது

ஆனால் அவள் சிக்கவில்லை, போலிசுக்கு தண்ணி, மினரல்வாட்டர், ரோஸ் வாட்டர் என எல்லாமும் காட்டினாள், பிடிபடவில்லை

அழகு நிலையங்கள், சினிமா வாய்ப்புகள், பெரும் பணம் என எதற்கும் அவள் சிக்கவில்லை

ஆனால் அம்மணி ஒரு விஷயத்தில் வீக்காக இருந்திருக்கின்றாள், அது அவளின் பீசா பிரியம்

ஆந்திரா போலிஸ் அழகாக வலை விரித்தது

கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்து கட்டளை பிறப்பித்த அவளுக்கு தினமும் 3 பீசா பேண்டுமாம், தகவல் போலிசாருக்கு கிடைத்திருக்கின்றது

பீசா டெலிவரிக்காரனாக போலிசாரையே அனுப்பியிருக்கின்றார்கள், பலமுறை பல பீசாக்களோடு பல போலிசார் சென்றிருக்கின்றனர்

உறுதிபடுத்தியபின் தூக்கி வந்து ஆந்திர சிறையில் அடைத்துவிட்டார்கள், பீசாவிற்கு ஆசைபட்ட அம்மணி இப்பொழுது ஆந்திர கோங்குரா சட்ணிக்கு தள்ளபட்டிருக்கின்றார்

ஆந்திர போலிசுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன, விசாரணை தீவிரமாக நடக்கின்றது, எப்படியும் பீசாவிற்காவது அம்மணி உண்மையினை சொல்வார் என கடும் நம்பிக்கையில் ஆந்திர காவல்துறை இருக்கின்றது

"எவ்வளவு பெரிய உலகளாவிய நெட்வொர்க்கினை , பெரும் மில்லியன் வர்த்தகத்தை, பீசாவிற்கு ஆசைபட்டு காதலி காட்டிகொடுத்துவிட்டாளே, அல்பம் இவளையா காதலித்தோம்.. என பர்மா லட்சுமணன் சுவரில் முட்டிகொண்டிருக்கின்றான்

ஆக பீசா பெரும் கடத்தல் சாம்ராஜ்யத்தை காட்டிகொடுத்திருக்கின்றது

இயக்குநர் ஹரி போன்றோருக்கு, சூர்யா போன்றவர்களுக்கு அடுத்த கதை ரெடி....













 


 

No comments:

Post a Comment