Friday, March 24, 2017

இந்திய பாராளுமன்ற தாக்குதல் போலவே லண்டனினும் தாக்கியிருக்கின்றார்கள்





17458427_10208738777361919_2213553119093332849_n.jpg


இந்திய பாராளுமன்ற தாக்குதல் போலவே லண்டனினும் தாக்கியிருக்கின்றார்கள்


பெரும் அதிர்ச்சியினை கொடுக்கவேண்டும் என செய்யபட்ட தாக்குதல் அது, 4 பேர் உயிரிழ்ந்திருக்கின்றார்கள். நிலமை கட்டுப்பாட்டில் இருக்கின்றது, ஆனால் மிக கடுமையான காவல்


யார் செய்தார்களோ தெரியாது, ஆனால் ஐஎஸ் இயக்கம் உரிமை கோருகின்றது, அது அப்படித்தான் மாரடைப்பில் செத்தவர்களை தவிர ஐரோப்பாவில் யார் செத்தாலும் நாங்கள்தான் காரனம் என சொல்லும், அதில் அதற்கொரு சந்தோஷம்





விரைவில் பிக் பென் கோபுரத்தையும் இடிப்பார்களாம் சொல்லிகொள்கின்றார்கள்

உலகெல்லாம் பெரும் தீவிராவாத தாக்குதல் நடக்கலாம் என்கின்றார்கள், அதற்கான புகை வருகின்றது

அமெரிக்கா விமானங்களில் லேப்டாப் எடுத்து செல்ல தடை விதித்திருகின்றது, லண்டனும் அதனையே சொல்கின்றது

இந்தியாவில் தாஜ்மகாலுக்கு பாதுகாப்பினை பலபடுத்துங்கள் என்றெல்லாம் ஆலோசனைகள் கொடுக்கபடுகின்றன‌

லண்டனை தொடர்ந்து பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளிலும் துப்பாக்கி சத்தம் கேட்டதாக சொல்கின்றார்கள்

லண்டன் தாக்குதல் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது, உலகம் ஒருவித பரபரப்பில் இருக்கின்றது, எதுவும் எப்பொழுதும் நடக்கலாம் எனும் எதிர்பாப்பு உச்சத்தில் இருக்கின்றது,

பெரும் எச்சரிக்கை குரல்கள் கேட்கின்றன‌.

தமிழகம் விசித்திரமான பகுதி அல்லவா?

இங்கு மட்டும் தொப்பி, மின்கம்பம் என குரல்கள் கேட்கின்றன‌

ஒரு கும்பல் தொப்பியோடு சுற்றுகின்றதாம்,

இன்னொரு கும்பல் மின்விளக்கு கம்பத்தில் கை வைக்காதவரை சிக்கல் இல்லை













 


 

No comments:

Post a Comment