கோவையில் ஒரு இஸ்லாமியர் சில சொந்த கருத்துக்களுக்காக தன் சொந்த மக்களால் கொல்லபட்டிருக்கின்றார்
மதவெறி எவ்வளவு கொடுமையானது என அப்பட்டமாக தெரியும் நேரமிது
தாலிபான்களும், ஐஎஸ் இயக்கமும் செய்வதை கோவை மண்ணிலும் பார்க்கும்பொழுது பகீர் என்றுதான் இருக்க்கின்றது, அவன் மதத்தை ஏற்றான் அல்லது நிராகரித்தான் என்பதை பொறுத்தா இந்த பூமியில் வாழும் உரிமை நிர்ணயிக்கபடும்???
சிங்கமும், புலியும், கரப்பானும் வாழும் பூமியில் ஒரு மானிடன் வாழகூடாதா?
இவ்வளவு நடந்திருக்கின்றது, இஸ்லாமிய சங்கங்கள் கடும் அமைதி
ஆனால் ஒரு வேற்றுமதத்துகாரன் கொன்றிருந்தால் இந்நேரம் தமிழகத்தில் யார் வசிக்கமுடியும்?
இந்தியாவில் மோடி ஆட்சியின் படுகொலைகளை பாரீர் என வீதிக்கு வந்திருப்பார்கள், பெரும் கலவரமே வெடித்திருக்கும்
அதாவது அவர்களை அவர்களே கொல்லலாம், கழுத்தறுத்து துடிக்க துடிக்க கொல்லலாம், சத்தமே இருக்காது, ஆனால் அடுத்தவன் அடிக்க கூட விடமாட்டார்கள்
அவன் எந்தமதமாகவும் இருக்கட்டும் கவலையில்லை, ஆனால் இந்த தேசம் மதவெறியில் ஒரு குடிமகனை இழந்திருக்கின்றது, மானிட சமூகம் ஒரு மனிதனை இழந்திருக்கின்றது
இப்படி சக மனிதனை கொன்றுவிட்டு அவர்களுக்கு கிடைக்கபோவது என்ன கடவுளின் அருளா?
இல்லை, நிச்சயம் இல்லை
சாத்தான் கூட அவர்களை சேர்க்காது, இவர்களை கண்டாலே வெறுத்து ஒதுக்கும்., சாத்தானே வெறுக்கும் கொடூரம் இது
அந்த மானிடனுக்கு சக மானிடனாக ஆழ்ந்த அஞ்சலி...
No comments:
Post a Comment