Thursday, March 30, 2017

நடிகர்களை கூத்தாடிகள் என சொல்வதற்கு நடிகை ஸ்ரீரிபிரியா கண்டனம்





திரையுலக நடிகர்களை கூத்தாடிகள் என சொல்வதற்கு நடிகை ஸ்ரீரிபிரியா கண்டனம்


கூத்து கட்டுபவனை பின் எப்படி அழைப்பார்கள் அம்மணி? விஞ்ஞானி, மேதை, அறிஞன், சிந்தனையாளன் என்றா அழைக்க முடியும்?


கூத்தாடி என்றுதான் அழைக்கமுடியும்





கூத்து கட்டுபவன் தான் நடிகன், அதனால் அவன் கூத்தாடி என சொல்லியது எம்.ஆர் ராதா, அவர்தான் அப்படி அழைக்கவே சொன்னார்

அதாவது அம்மணி, நடிப்பவர்களை, வேஷ‌க்காரன் என சொல்லலாம், முகசாயம் பூசுபவன் என சொல்லலாம், நாங்கள் சொல்வது போல கூத்தாடி எனவும் சொல்லலாம்..

கூத்து என்பதுதான் தமிழ்பெயர், செம்மொழியில் அந்த தொழிலாளிகளை அப்படித்தான் அழைக்க முடியும்..

உண்மையினை சொல்லுங்கள் அம்மணி, நடிகர்கள் செய்யும் தொழில் கூத்தா?

இல்லை விண்வெளி, ராக்கெட் அணுகுண்டு ஆராய்ச்சியா? இல்லை புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ தொழிலா?

பூ கட்டுபவன் பூக்காரன், தச்சு வேலை செய்பவன் தச்சன், கூத்து கட்டுபவன் கூத்தாடி இதனை சொன்னால் அம்மணிக்கு கோபம் வருகின்றது.




 

 



 

No comments:

Post a Comment