ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கட்ஜூ
ஓஓஓ மலரரும் நினைவுகள், மலரட்டும்
அவர்தான் என்ன செய்வார்? முதலில் காதலை சொன்னால் எம்ஜிஆரால் தொல்லை, கட்ஜூ சென்னை ரோட்டில் ஓடவிடபட்டிருப்பார்
அடுத்து சொல்ல நினைத்தால் மன்னார்குடி குடும்ப தொல்லை, "எங்கள் அட்சய பாத்திரம் மீதா ஆசைபடுகின்றாய்.." என ஆட்டோவினை கோர்ட்டுக்கே அனுப்பியிருப்பார்கள்
கடந்தவருடம் கூட சொல்லியிருக்கலாம், சொல்லியிருந்தால் இன்னொரு மர்ம மரணம் என செய்திகள் வந்திருக்கும்..
அதனால் மனிதர் இன்னும் சொல்லாவிட்டால் எப்படி?, அதனால் சொல்லிவிட்டார்
நல்லவேளையாக ஜெயா சொத்துகுவிப்பு வழக்கு இவரிடம் சிக்கவில்லை, சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
வழக்கு தொடர்ந்தவரை உள்ளே வைத்துவிட்டு , ஆச்சாரியாவினை நாடு கடத்திவிட்டு, ஜெயாவிற்கு 100 கோடி நஷ்ட ஈடு வழங்கி வெளியே விட்டிருப்பார்
"எங்கிருந்தாலும் வாழ்க....." என கண்ணீரோடு அனுப்பியிருப்பார்...
சசிகலா முதல்வராகியிருபபர்
ஆக ஜெயாவிடம் சொல்லபடாத ஒரு காதல், தமிழகத்தை காப்பாற்றியிருக்கின்றது
ஜெயாவின் சீடன், மருமகள், தோழி, மருமகளின் கணவன் எல்லாம் கட்சி தொடங்கும் நிலையில், நான் ஜெயலலிதாவினை காதலித்தவன் என கட்சி ஏதும் தொடங்கிவிடுவாரோ?
ஜெயா கட்ஜூ பேரவை என ஒன்றை தொடங்கினால் என்னாகும்?
கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது..
(முன்பு இருவரும் சந்தித்த தருணத்தின் படம், "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கின்றாய்.." என்ற பாடல் காதுகளில் கேட்டால் நாம் பொறுப்பல்ல)
No comments:
Post a Comment