Monday, March 27, 2017

தாதுமணல் ஏற்றுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை

17554518_10208768438303424_9069691408292805287_n.jpg30 ஆண்டுகளாக இல்லாத தடை, அதுவும் தாதுமணல் தொழிலுக்கு அரசு தடைவிதித்த பின்னும் ,அதன் ஏற்றுமதிக்கு இல்லாத தடை இப்பொழுது விதிக்கபட்டுவிட்டது


விவகாரம் எங்கோ இடிக்கின்றது


தமிழகத்தில் எத்தனையோ இயற்கை கொள்ளைகள் நடக்க, தாது மணலை குறி வைத்து அடிக்கின்றார்கள்,இந்த வழக்கில் மாநில அரசு பட்டும் படாமலும்தான் பதில் சொல்லியிருக்கின்றது. ஆனால் எதிர்தரப்பு கடுமையாக நிற்கின்றது


எதிர்தரப்பு என்பது யார்? தடை கோரியவர்கள்


கொஞ்சம் ஆழ நோக்கினால் பல விஷயங்கள் புரியும்


தாது மணல் தொழிலை முடக்கியே தீருவது எனும் முடிவு எங்கோ எடுக்கபட்டுவிட்டது, நிச்சயம் அது மாநில அரசின் திட்டம் அல்ல.


மாநில அரசு எதற்கோ ""தாது மணலை அரசு ஏற்று நடத்தும்" என அறிவித்தது தவிர, அதனை தொடங்கும் திட்டமெல்லாம் அதனிடம் அப்போதைக்கு இல்லை..


டாஸ்மாக்கையே அரசுடமையாக்கிய தமிழக அரசு நினைத்திருந்தால் என்றோ தாதுமணலை எடுத்து நடத்தியிருக்கும்,


ஆனால் 1980களில் தாது மணலை அரசுதான் தொடங்கியது, கையினை சுட்டதால் விட்டுவிட்டது, பின்பு பல தனியார் கம்பெனிகள் இறங்கி முக்காடு போட்டன‌


வைகுண்டராஜன் மட்டும் தூள்பறத்தினார், அது எப்படி? என்ன விஷயம்? எப்படி அவரால் மட்டும் முடிந்தது என்பது இன்றுவரை புரியாத புதிர். எத்தனையோ வெளிநாட்டுப் எம்பிஏக்கள் தோற்ற தொழிலில் 5ம் வகுப்பு தாண்டாத பாமரன் சாதித்தார்.


வைகுண்ட ராஜன் நல்லவர் என்றோ, மகா உன்னதமானவர் என்றோ சொல்லமுடியாது, ஆனால் அந்த தொழிலில் அவர் கொடிகட்டி பறந்தார் என்பது உண்மை.


வெறும் கிராமத்தானுக்கு இந்த இல்மனைட், ரூமைல்ட் எல்லாம் எப்படி புரிந்தது? எப்படி உலகெல்லாம் அவனால் விற்க முடிந்தது என்பதெல்லாம் பெரும் விஷயங்கள்..


விஞ்ஞான , வியாபார . எந்திர மூளை கலக்காத ஒருவரால் அந்த தொழிலில் வெற்றிபெறுவது சாத்தியமில்லை, கூடவே அரசியல் மூளையும் வேண்டும்..


நொடியில் ஏமாற்றிவிடும் உலகில், அதுவும் சர்வதேச வியாபார‌ அவரால் மட்டும் எப்படி நிலைத்து நிற்க முடிந்தது என்றால் அது ஆச்சரியம்தான்..


எந்த தொழில் அரசாங்க தொடர்புடையதோ அதில் முதலில் அதிர்காரிகளும் பின் கட்சியினரும் புகுந்துவிடுவார்கள், அவர்களுக்கு சம்பாதிக்க சம்பந்தபட்டவன் கூடுதலாக சம்பாதிக்கவேண்டும்


அது சந்தணமரம் என்றால் கூடுதல் வெட்டவேண்டும், கிரானைட் கல் என்றால் நிறைய இடம் தோண்டவேண்டும், அது தாது மணல் என்றால் நிறைய அள்ளியாக வேண்டும்


வைகுண்டராஜனும் அதில் சிக்கிகொண்டார்


இது பற்றி பேசினால் லியாகத் அலிகான் அளவிற்கு வசனம் எழுதவேண்டும்


இப்போதைய விவகாரம் தாதுமணல் முடக்கம் பற்றியது


ஆக மாநில அரசினையும் மீறி தாதுமணல் தொழில் முடக்கபடுகின்றது, கட்டட இடிப்பு, குடோன் சோதனை, உயர்நீதிமன்ற தடை எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன.


இவை எல்லாம் எதனை சொல்கின்றன‌


எமது யூகம் சரியாக இருந்தால் இப்படி நடக்கலாம்


அதாகபட்டது ஆற்றுமணலையே விடாத காலம் இது, தங்க சுரங்கமான தாதுமணலை எல்லாம் அப்படியே விடமாட்டார்கள்.


வைகுண்டராஜனை அந்த தொழிலிருந்து அப்புறபடுத்திவிட்டால், பின் வேறு ஏதாவது வடக்கத்திய நிறுவணங்கள் வரலாம்


கொஞ்சம் கொஞ்சமாக அவை விஸ்வரூபமெடுக்கலாம்


டாட்டா, வேதாந்தா என ஏகபட்ட நிறுவணங்கள் காத்துகொண்டிருக்கும் ஏரியா அது,


அதுவும் டாட்டா ஏற்கனவே அடிபட்ட பாம்பு


ஆக தாது மணல் வியாபாரம் என்பது நிற்கபோவதில்லை, மாறாக வைகுண்டராஜனிடம் இருந்து பிடுங்கி இன்னொரு கம்பெனியிடம் ஒப்படைக்கும் வேலை நடக்க தொடங்க இருக்கின்றது


ஏன் இவ்வளவு காலமும் இல்லாத மாறுதல் இப்பொழுது?


மத்திய அரசு அவ்வளவு பலமாயிற்று, மாநில அரசு அதன் காலில் விழுந்து கிடக்கின்றது,


மத்திய அரசுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் எல்லாம் தமிழகத்தில் எளிதாக கால்பதிக்கும் நிலை..


தாது மணல் தொழில் கைமாற அச்சாணி போட்டிருப்பது தெரிகின்றது, தெரியாமல் எத்தனை வடக்கத்திய நிறுவணங்கள் தமிழகத்தில் பாய்கின்றனவோ தெரியாது.

No comments:

Post a Comment