Tuesday, March 28, 2017

அந்த வீடியோ விவகாரம் பற்றி அங்கிள் சைமன் விளக்கம்

https://www.facebook.com/Jeyaganapathi/videos/10210246011239835/

அந்த வீடியோ விவகாரம் பற்றி பெரும் விளக்கம் கொடுத்துகொண்டிருக்கின்றார் அங்கிள் சைமன்


வழக்கமாக காமெடி செய்பவர்தான், இப்பொழுது காமெடியின் உச்சகட்டத்திற்கு சென்றிருக்கின்றார், அவர் அரசியல் காமெடியின் உச்சமாக கூட இது இருக்கலாம்


கர்பிணிகள், இதய நோயாளிகள், வயிற்றுபிரச்சினை உள்ளவர்கள் மேற்கொண்டு படிக்கவேண்டாம், அது உங்களுக்கு ஆபத்தானது..


சென்றுவிட்டீரகளா?.....


அதாவது முன்பு அவர் கிறிஸ்தவ, இந்து தெய்வங்களை பேசிய பேச்சுக்களின் வீடியோக்களை வெளியிட்டு, அவர் பெயரை கெடுத்து சட்டமன்ற தேர்தலில் அவரை தோற்கடித்தார்களாம்


இப்பொழுது ஆர்.கே நகரில் பெரும் வெற்றிவாய்ப்போடு அவர்கள் இருக்கும் நேரத்தில் இம்மாதிரி போலி வீடியோக்களை வெளியிட்டு வெற்றிவாய்ப்பினை கெடுக்க சதியாம்


இவருக்கு பயந்து யார் இப்படி செய்திருப்பார்கள்? தேர்தலில் தோல்விபயம் உள்ளவர்கள்தானே செய்திருக்க முடியும்? அந்தளவு பயம் உள்ளவர்கள் யார் என அங்கிள் சொல்லவில்லை


காரணம் சொன்னால் பிரித்துவிடுவார்கள், அல்லது இவரை நிற்க வைத்து சுற்றி நின்று சிரிப்பார்கள்...


அந்த வீடியோவில் இருப்பது அவர் கட்சிக்காரர்கள் வைக்கும் பேனர் இல்லையாம், நன்றாக பார்க்கவேண்டுமாம் (அவரே பார்க்க சொல்கின்றார், கருமம்), அதில் அவரும் அவர் அண்ணன் பிரபாகரனும் அப்படி வழக்கமாக நிற்கமாட்டார்களாம்


அதாவது கட்சியினை அவமானபடுத்தும்படி எடுக்கபட்ட போலி வீடியோவாம், அந்த வீடியோவில் இருப்பவன் உடை அப்படியே இருக்கின்றதாம், (கர்மம் என்ன எதிர்பார்க்கின்றாரோ)


வீடியோவில் அந்த ஜோடிகள் இவர் கட்சி பேனரை விட்டு எங்கோ பின்னிகிடந்தார்களாம், பேனர் மட்டும் தெரிந்ததாம், ஆக இது திட்டமிட்ட சதியாம்


படம் எடுத்தவன் என்ன பெரும் ஒளிப்பதிவாளரா? அவன் என்ன சினிமா கேமராவிலா பின்னால் சென்று எடுக்க முடியும்?


இன்னும் சொன்னார் பாருங்கள்


இந்த பிரச்சினையினை சுழிய பிரிவு போலிஸ், அதாவது சைபர் கிரைமில் புகார் செய்வாவாராம்


சைபர் என்றால் 0 என இவரே முடிவு செய்துவிட்டார், இணையத்தை குறிக்கும்
Cyber க்கும், சுழியம் எனும் 0வினை குறிக்கும் சைபருக்கும் வித்தியாசம் தெரியாதா?


தமிழ்படுத்துகின்றேன் என இணைய Cyberரை, சுழியம் என அசால்ட்டாக சொல்கின்றார் அங்கிள், அவர் தமிழ் வளர்க்கும் லட்சணம் இப்படி இருக்கின்றது


Cyber Crime போலிசின் தமிழ் பெயர் சுழியம் (0) போலிசாம்..


இத்தோடு விட்டாரா?


என் பிள்ளைகளுக்கு ஒழுக்கம்தான் முக்கியம், நான் அப்படி செதுக்கியிருக்கின்றேன் என விளக்கம் வேறு


விஜயலட்சுமி எனும் நடிகையினை இவர் எப்படி செதுக்கினார் என்பது பற்றி நாம் கேட்க கூடாது


இது போலியான வீடியோவாம், இதனை செய்தவர்களை அவர் காரி உமிழ்த்து துப்பிவிட்டு தேர்தலில் வெற்றிகொடி நாட்ட போகின்றாராம்.


அவர் உமிழ்வது இருக்கட்டும், மொத்த தமிழகமும் அப்படித்தான் உமிழ்ந்துகொண்டிருக்கின்றது என்பது வேறு விஷயம்


இன்னும் பக்குவமடையவில்லை சைமன்


பொதுவாக எல்லா கட்சியிலும் இம்மாதிரி செய்திகள் வரும், வருண் காந்தி முதல் பெரிய கருப்பன் வரை சிக்குவார்கள்


ஆனால் என்றாவது அக்கட்சி தலைவர்கள் வந்து இப்படி விளக்கம் கொடுப்பார்களா? கொடுத்தால் என் தொண்டன் குதிருக்குள்ளோ குழிக்குள்ளோ இல்லை என்பது போல் ஆகிவிடாதா?


அங்கிள் சைமன் அதனைத்தான் செய்துகொண்டிருக்கின்றார்


இப்படி ஒருவரை தலைவனாக கொண்டு அலையும் அந்த பரிதாபம் மிக்க கூட்டத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கின்றது


மொத்தத்தில் அங்கிள் கொடுத்திருக்கும் 12 நிமிட விளக்கத்தில் நிறைய ஹிஹிஹிஹி விஷயங்கள் இருக்கின்றன, சில இடங்களில் அவரே சிரித்திருக்கின்றார்


ஆனால் சுருக்கம் இதுதான்


இது தேர்தலில் சீமானின் வெற்றிவாய்ப்பினை பறிக்க நடக்கும் சதி, தமிழ்பிள்ளைகளுக்கு எதிரான வஞ்சக திட்டம், இதனை குறித்து சீரோ போலிஸ் அதாவது சைபர் கிரைமில் அவர் புகார் கொடுப்பார்.


இனி தேர்தல் முடிவு வரட்டும், அந்த வீடியோவால் தோற்றோம் என்பார்


இனி அடுத்த தேர்தலில் என்ன சொல்வார்?


அவருக்கு வாய்த்த தம்பிகள் சாதரணமானவர்களா?


நிச்சயம் ஏதாவது ஒரு வீடியோ வெளியிட்டு அவரை காப்பாற்றுவார்கள்....




 

No comments:

Post a Comment