Wednesday, March 22, 2017

அண்ணாச்சி பெரும் வில்லாதி வில்லன், பெரும் சாமர்த்தியசாலி




FB_IMG_1490163497456


அண்ணாச்சி பெரும் வில்லாதி வில்லன், பெரும் சாமர்த்தியசாலி


அசைக்கமுடியாதவர், தென்னக சோழன், தேரிகாட்டு பாண்டியன், மன்னாதி மன்னன்


நாட்டுகுள்ளே நாடு வைத்திருப்பவர், அரசர்களை உருவாக்குபவர், கடல் அலையினை அலற செய்பவர், ஆண்டவனை தவிர அவரை அசைப்பவன் யாருமில்லை...





மற்ற பயலுக மாதிரி ஊருக்குள்ள நிலம் வைத்திருப்பவர் அல்ல, தன் நிலத்திற்குள் ஊரையே வைத்திருப்பவர், கடலை கட்டிவைத்திருப்பவர், கடல் ராசா...

கலைஞருக்கு கடுக்காய் கொடுத்தவர், தீப்சிங் பேடிக்கே பீடி கொடுத்தவர்

டாட்டாவிற்கே டாட்டா காட்டியவர் என்று அவருக்கு புழகாரம் சூட்டியவன் எல்லாம், நேற்று அவர் தினகரனை சந்தித்த செய்தி கேட்டபின் தலையினை மூடிகொண்டு படுத்துவிட்டான்

சிலர் வீட்டை பூட்டிகொண்டு முடங்கி கிடப்பதாகவும் செய்தி

மனோஜ் பாண்டியன் போன்றவர்களே தினகரனுக்கு சவால்விடும் வேளையில், அண்ணாச்சி ஓடி சென்று தினகரனை சந்தித்தது அவரின் இமேஜினை குலைத்துவிட்டது..

டாட்டாவினை விரட்டிய அண்ணாச்சி, தினகரனிடம் சிக்கிகொண்டது நன்றாக தெரிகின்றது.

சசிகலா புஷ்பா கிட்டதட்ட தலைமறைவான பின் இன்னும் நன்றாக விளங்குகின்றது..

அண்ணாச்சியின் பெரும் பிம்பம் தென்னக பகுதியில் ஒரே நாளில் சிதறிவிட்டது, அவரின் முகமூடி ஒரேநிமிடத்தில் கிழிந்துவிட்டது.

அண்ணாச்சியின் நிலை மாறியாச்சி.....





 


 

No comments:

Post a Comment