Friday, March 31, 2017

வைகோ நிகழ்த்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

 


17626679_10208789871199233_5074877473536338642_n.jpg


மதிமுக எனும் கட்சி ஈழதமிழர்களுக்காக‌ நிரம்ப உழைத்தாகிவிட்டது, இப்பொழுது தமிழர்களுக்காக உழைக்க கிளம்பிவிட்டது


எம்ஜி ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா நடத்தி தன் பெரும் தார்மீக கடமையினை அது நிறைவேற்றிகொண்டிருக்கின்றது


தமிழர்களை மகிழ்வித்த எம்ஜிஆருக்கு அது நூற்றாண்டு விழா நடத்துகின்றது




வைகோ சரோஜாதேவியினை அழைத்தெல்லாம் எம்ஜிஆர் நிகழ்ச்சி நடத்துகின்றார், வெண்ணிற ஆடை நிர்மலா, லதா எல்லாம் ஏன் அழைக்கவில்லை என தெரியவில்லை


எம்ஜிஆர் இருக்கும் வரை அவரை தீவிரமாக எதிர்த்த கோப்பால் சாமி, இப்பொழுது எம்ஜிஆர் புகழ்பாட காரணம் என்ன?


செத்து 30 வருடன் ஆனபின்புதான் எம்ஜிஆர் பற்றி படித்தாரா? அவ்வளவு மெதுவான மூளை கொண்டவரா வைகோ, அட பரிதாபமே...


மிஸ்டர் வைகோ


எம்ஜிஆருடன் 1960களில் பணியாற்றிய சரோஜாதேவியினை அழைத்திருக்கின்றீர்கள், இன்னும் எம்ஜிஆரோடு பழகிய எத்தனையோ பேரினை மேடையேற்றியிருக்கின்றீர்கள்


ஆனால் 1940 முதல் எம்ஜியாரோடு பழகி, அவருக்கு வசனம் எழுதி, அவரை எம்.எல்.ஏ ஆக்கி பின்னாளில் முதல்வரே ஆக்கிய ஒருவர் கோபாலபுரத்தில் இருக்கின்றார்


ஒரு தேங்காய் மூடி வக்கீலாக வாழ்க்கையினை தொலைத்திருக்கவேண்டிய உங்களை பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ, எம்பி பின் கட்சி தலைவர் என உருவாக்கியதும் அவர்தான்


ஆக எம்ஜிஆரை உருவாக்கியவர், உங்களை உருவாக்கியவர் என இரு நன்றிகடன்கள் உங்களுக்கு இருக்கின்றன‌


இன்று எம்ஜிஆருக்கு நடக்கும் கூட்டத்தில் அமர முழு தகுதிபடைத்தவர் அவரே


அவரை ஏன் நீங்கள் அழைக்கவில்லை மிஸ்டர் வைகோ???


கலைஞருக்கு எம்ஜிஆரை பற்றி தெரியாததெல்லாமா சரோஜா தேவிக்கு தெரிந்துவிடும்???


எம்ஜிஆருக்கு விழா சரியாக ஆர்.கே நகர் இடைதேர்தலின்பொழுதுதான் நடத்தவேண்டுமா? கொஞ்ச நாள் கழித்து நடத்தினால் எம்ஜிஆர் கல்லறையோடு கடலுக்குள் விழுந்துவிடுவாரா?


அது இருக்கட்டும் ...


ரஜினியும் சினிமாவிற்கு வந்து 42 ஆண்டுகள் ஆகின்றன, இன்னும் 8 வருடத்தில் 50ம் வருடம் கொண்டாடபடும்


அன்று நீங்கள் இதே போல ஸீரிதேவி, லட்சுமி, மாதவி, அம்பிகா, ராதா, சரிதா என எல்லா ரிட்டையர்டு நடிகைகளையும் தேடிபிடித்து வந்து விழா நடத்தி ஆகவேண்டும்


இல்லாவிட்டால் தமிழர்கள் உங்களை சும்மா விட மாட்டார்கள்


எம்ஜிஆருக்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா?


ஆக சரோஜாதேவியினை விமானம் ஏற்றிய கையோடு, இந்த ரஜினியின் முன்னாள் நடிகைகளை தேடிபிடித்து கொண்டுவர கிளம்புங்கள்


இன்னும் 8 வருடம்தான் இருக்கின்றது, யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்...


ஈழம்பிடிப்பேன் என தோணியேறி போனவர், இப்பொழுது சரோஜாதேவியினை பிடித்து வந்திருக்கின்றார்....



No comments:

Post a Comment