Monday, March 27, 2017

தீரனின் அந்த பேச்சு கண்டிக்கதக்கது...

https://youtu.be/2B_Ajq02H9E

தொலைகாட்சி விவாதமொன்றில் அதிமுகவின் தீரனின் பேச்சு நிச்சயம் சர்ச்சையானது


குற்றவாளி என தண்டிக்கபட்டு சிறையில் இருப்பவர் உங்கள் தலைவியா என்றால், கனிமொழியும் ராசாவும் உல்லாசபயணம் சென்றார்களா? என்கின்றார் தீரன்


மனிதர் என்ன அடிப்படையில் பேசுகின்றார் என்றே தெரியவில்லை




ஜெயா சசிகலா வழக்கு 18 ஆண்டுகள் இழுத்தடிக்கபட்டு, குன்ஹாவால் தீர்பிடபட்டு பின் டெல்லி கோர்ட்டிலும் நிரூபிக்கபட்டிருக்கின்றது


அதாவது அவர்கள் குற்றவாளிகள் என இரு நீதிமன்றங்கள் அறிவித்துவிட்டது, உள்ளே தள்ளியாயிற்று


கனிமொழி, ராசா இருவரும் கைது செய்யபட்டார்கள், ஆனால் இன்னும் குற்றசாட்டினை நிருபிக்கமுடியவில்லை, குன்ஹா போன்றே மிக நேர்மையான நீதிபதியான ஒபி ஷைனி கேட்கும் ஆதாரங்களை சிபிஐயினால் திரட்ட முடியவில்லை


ஒரு ஆதாரமும் இன்றியா வழக்கு தொடர்ந்தீர்கள் என பலமுறை ஷைனி கண்டித்துகொண்டே இருக்கின்றார்


ஜெயா வழக்கினை ஜெயா தரப்பு இழுத்தது என்றால்,கனிமொழி வழக்கினை இழுத்துகொண்டிருப்பது சிபிஐ தரப்பு


இது ஜனநாயக நாடு, யாரும் யார் மீதும் குற்றம் சுமத்தலாம், பழிக்கலாம், ஆனால் நீதிமன்றம் என்ன சொல்கின்றதோ அதை பொறுத்துதான் முடிவு


அதனால்தான் நீதிமன்ற வழக்கில் இருக்கும் விஷயங்களை பேச கூடாது என்பது பொதுவிதி


குற்றம் சாட்டபட்டவர் என்பது வேறு, குற்றவாளி என தீர்ப்பிடபட்டவர் வேறு


குற்றம் சாட்டபட்டவர் வெளியில் வந்தால் களங்கம் துடைக்கபட்டுவிடும், ஆனால் குற்றவாளி என சிறையில் தள்ளபட்டவர் ஒருநாளும் அந்த களங்கத்தை துடைக்க முடியாது,


இது தெரியாமல் அதிமுக தீரன் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார்


இவ்வளவிற்கும் இவர் பேராசிரியராம், உருப்படுமா?


தீரனின் அந்த பேச்சு கண்டிக்கதக்கது, ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்பு



No comments:

Post a Comment