Friday, March 31, 2017

அம்மணமாய் ஆர்பரிப்போம் ....


17629607_10208790310490215_2746004724359133667_n.jpg


டெல்லியில் நடக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு குழு போராட கிளம்பிற்று


அது ஒரு விவகாரமான குழு என்பதால் வித்தியாசமாக சிந்தித்துவிட்டது, அதாவது நாடே நம்மை திரும்பிபார்க்க வேண்டும் என யோசித்திருக்கின்றார்கள்


சும்மா கத்தினால் நாய் கூட திரும்பாது, அப்படியானால் கத்தி பியோஜனமில்லை, எதையாவது அதிரடி காட்டினால் தேசம் திரும்பும்,




காட்ட வேண்டும், எதனையாவது காட்ட வேண்டும்


இந்த வேகத்தில் சிந்தித்தபொழுது அவர்களுக்கு டெல்லி விவசாயிகளின் துன்பம் நினைவுக்கு வரவில்லை, மாறாக கோவணம் நினைவுக்கு வந்துவிட்டது, அதனை துறந்துவிட்டால்...


மனதிற்குள் உலகமே திரும்பிபார்க்கும் உணர்வு வந்துவிட்டது


உடனே அறிவித்துவிட்டார்கள் "அம்மண போராட்டம்", "அம்மணமாய் ஆர்பரிப்போம்"


சொன்னதோடு மட்டுமல்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார்கள், அதவாது "அம்மணமாய் ஆர்பரிப்போம்" எனும் அறிவிப்பு போஸ்டர்


மற்றபடி ஆளவந்தான் கமலஹாசன் பாணியில் அல்ல‌


சொன்னால் போதாதல்லவா? சொன்னபடி செய்யவும் தெருவுக்கு வந்துவிட்டார்கள், காவல்துறைக்கு வியர்த்துவிட்டது


போட்டு சாத்தலாம்தான், ஆனால் அடிக்க அடிக்க அவிழ்த்துவிட்டால் கருமத்தை என்ன சொல்ல..


அதனால் பிடித்து வைத்து புத்திசொல்லிகொண்டிருக்கின்றார்கள், பொது இடத்தில் இது சட்டவிரோதம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


காவல்துறை சொற்படி கேட்டு கலைந்து சென்றாலோ இல்லை வேறு வழியில் போராட சிந்தித்தாலோ அவர்களுக்கு நல்லது


இல்லாவிட்டால் உங்கள் விருப்படி நில்லுங்கள், இங்கு அல்ல கம்பிகளுக்கு பின்னால் என இழுத்து செல்லபடுவார்கள்


விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதாக எண்ணிகொண்டு, சன்னி லியோனுக்கு ஆதரவாக கிளம்பியிருக்கின்றார்கள்,



No comments:

Post a Comment