இந்தியா என்ற முழு நாட்டை உருவாக்கிவர்களும் அதற்க்கு
I N D I A = Independent Nation Declared In August
என்று பெயர் கொடுத்தவர்களும் பிரிடிஷ் காரர்கள்
இப்படி சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்
எந்த மரத்தடியில் அல்லது மரத்திற்கு கீழ் இப்படி ஞானம் பெற்றார்கள் என தெரியவில்லை
அலெக்ஸாண்டர் காலத்திலே இந்தியா என்றொரு நாடு இருந்தது, அதாவது சிந்து நதிக்கு அப்பால் இருந்தது இந்தியா, (சிந்து என்பது மேல்நாட்டு மொழியில் இந்து) என அழைக்கபடும்.
அந்த நதியின் பெயராலேயே இந்நாடு இந்தியா என அழைக்கபடாயிற்று
அப்பகுதி மக்கள் இந்துக்கள் என்றே அழைக்கபட்டனர்
இந்தியா செல்கின்றேன் என்றுதான் அலெக்ஸாண்டர், பாகியான், யுவான் சுவாங், மார்க்கோ போலோ, இபின் பதுத்தா என பலர் வந்தனர்
கோரியும், கஜினியும், பாபரும் இந்துஸ்தானம் போகின்றோம் என சொல்லிதான் வந்தார்கள்
ஏன்? கொலம்பஸே இந்தியாவிற்கு செல்கின்றேன் என சொல்லி எங்கோ போய் நின்றான், அவன் சென்றது இந்தியா அல்ல என்றவுடன் அப்படியானால் அது மேற்கு இந்தியா என அவனே சொல்லிகொண்டான்
பிரிட்டிஷார் கிழக்கிந்திய கம்பெனி என்றுதான் பெயரே வைத்திருந்தனர்
முலலாய சாம்ராயம் இந்த இந்தியாவினை மொத்தமாக ஆண்டது, நாயக்க மன்னரும், சிவாஜியும் வீழ்ந்து வெள்ளையன் வரும்பொழுது இந்நாடு மொத்தமும் முகலாயரின் இந்துஸ்தானமாகாவே இருந்தது
எல்லா மன்னர்களும் முகலாயருக்கு நேரடியாக, அல்லது மறைமுகமாக கப்பம் கட்டியபடி இருந்தனர்,
ஆட்சியினை கைபற்றிய வெள்ளையன் முகலாயருக்கு கொடுத்த வரிகளை எமக்கு தாருங்கள் என கேட்டுத்தான் போர்களே நடத்தினான்
அதன் அர்த்தம் என்னவென்றால் இது அன்று வெள்ளையன் வரும்பொழுதும் ஒரே தேசமாகத்தான் இருந்திருக்கின்றது..
பின்னர் பிரிட்டிஷ் இந்தியா என பெயரிட்டான்
அதாவது இந்நாட்டு பல ஆட்சியாளர்களால், பல பகுதிகளில் ஆளபட்டாலும் அவர்கள் மொத்தமாக இந்திய பகுதி என்றே அழைக்கபட்டது
உண்மை இப்படி இருக்க, I N D I A = Independent Nation Declared In August என்று பெயர் கொடுத்தவர்களும் பிரிடிஷ் காரர்கள் என சில பதர்கள் சொல்கின்றன
1700களில் இந்தியாவில் பிரிட்டிசாரின் கம்பெனி ஆளுகைக்கு வரும்பொழுது, மிக சரியாக 250 ஆண்டுகாலம் கழித்து ஒரு ஆகஸ்டில் நாம் சுதந்திரம் கொடுப்போம் என எழுதியா வைத்திருந்தான்?
ஒரு வாதத்திற்கு சொன்னால் கூட, ஆகஸ்டில் சுதந்திரம் வழங்கபடும் நாட்டிற்கா 5000 ஆண்டுகளுக்கு முன்பு பெயர் வைத்தார்கள்??
என் கனவு இந்தியா என அலெக்ஸாண்டர் வந்தபொழுது, ஆகஸ்டு எனும் மாதமே உலகில் கிடையாது..
எப்படிபட்ட கட்டுகதை இது
சொல்ல வருத்தமாக இருக்கின்றது, சில இஸ்லாமிய நண்பர்கள்தான் இந்த கட்டுகதைகளை பரப்புகின்றார்கள் எனும்பொழுது வருத்தம் கனக்கின்றது
நாட்டுபற்று என்பதும், நாட்டின் வரலாறு என்பதும் கொஞ்சமும் தெரியவேண்டாமா?
பிரிட்டனின் வரலாறு 1500ல் தொடங்கிற்று, அயர்லாந்து, ஸ்காட்லான்டு , இங்கிலாந்து, வேல்ஸ் எல்லாம் சேர்ந்து பிரிட்டன் ஆயிற்று
ஆனால் இந்தியா அலெக்ஸாண்டருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா என்றுதான் அழைக்கபட்டிருக்கின்றது.
இது பழம்பெரும் தேசம், சில புல்லுருவிகளுக்கு புரிய வாய்ப்பில்லை
I N D I A = Independent Nation Declared In August என்று பெயர் கொடுத்தவர்களும் பிரிடிஷ் காரர்கள் என எவனாவது சொன்னால், அவனை நான் மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
(அவர்கள் கையில் கிடைத்தால் இந்திய வரைபடத்தினை உருட்டு கட்டையில் பதித்து, அடிக்கவும் தயார்..)
நீங்கள் இந்தியர்கள் என்றால், சேர்ந்து கண்டியுங்கள்
No comments:
Post a Comment