Saturday, March 25, 2017

ரஜினி இலங்கைக்கு செல்வதை ரத்து செய்துவிட்டாராம்...




17498742_10208748401802524_1296759217395286484_n.jpg


சும்மாவே கால்நடுங்கிகொண்டிருக்கும் ஒருவனிடம் சிலர் கத்திகொண்டு ஓடிவந்தால் அவன் என்ன செய்வான்?


அதனைத்தான் ரஜினி செய்துகொண்டிருக்கின்றார்.


இலங்கைக்கு செல்வதை ரத்து செய்துவிட்டாராம், ஏன் என்றால் அதுதான் ரஜினி. தொழிலை தவிர அவர் எல்லா விஷயங்களுக்கும் இப்படித்தான்





கன்னடன் ரஜினி ஈழத்திற்கு செல்வதா? என பலர் பொங்குகின்றார்களாம்

அட பதர்களா? மீணவனை சுட்டான் என நீங்கள் முறையிடும் சுஷ்மா சுவராஜூம், மோடியும், பிரணாப் முகர்ஜியும் தமிழர்களா?

இலங்கைக்கு யாருமே செல்லவில்லையா?

சென்னை திருச்சி மதுரை என எத்தனை விமானங்கள் தினம் பறக்கின்றன? எத்தனை கப்பல்கள் வந்து போகின்றன‌

அவர்களை எல்லாம் தடுத்தா விட்டீர்கள்?

அதாவது யாரும் செல்லலாம், ரஜினி சென்றால் மட்டும் தவறு.

போரில் அழிந்த ஈழமக்களுக்கு வீடு கொடுப்பதும், அதில் ரஜினி கலந்து கொள்வதும் தவறா?

இன்று இலங்கையின் எதிர்கட்சி தலைவராக, ஜனாதிபதி மைத்ரிபாலாவுடன் நெருக்கமான உறவில் இருக்கும் சம்பந்தனுக்கு சென்னையில் வீடு உண்டு.

சிங்கள அரசில் இருக்கும் தமிழ் அமைச்சர்களுக்கு சென்னையில் குடும்பம் முதல் சொத்துவரை உண்டு.

புலிகளை ஆதரிக்காமல் சிங்களனோடு நல்ல உறவில் இருக்கும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இங்கு மணவுறவு உண்டு

இவர்கள் முரளிதரனின் மனையினை பிடித்து "ஏய் இனதுரோகி, சிங்களனுடன் கைகுலுக்கும் முரளிதரனை விவாகரத்து செய்..." என இன்னும் கிளம்பவில்லை, அதுவரை நல்லது

சொல்லமுடியாது செய்தாலும் செய்வார்கள்...

அதாவது சிங்களனோடு பழகும் ஈழதமிழர்கள் இங்கு வந்து வீடுகட்டலாம், சிங்களனோடு கைகுலுக்கும் எல்லோரும் சென்னை வரலாம்,

லைக்கா போல ராஜபக்சே நண்பர்கள் படமே எடுக்கலாம்

ஆனால் ரஜினி மட்டும் ஈழம் செல்ல கூடாது.

அவர்களை விடுங்கள், ரஜினி பற்றி நமக்கு தெரியாததல்ல, டாக்டர் ராமதாஸின் கும்பலே ரஜினியினை ஓட அடித்திருந்தது.

ஆனால் அவர்கள் தொகுதியிலே வென்று காட்டினார் விஜயகாந்த், அவரின் தைரியத்தில் கொஞ்சமும் ரஜினிக்கு கிடையாது.

கலைஞர் வாழ்க, ஜெயா நல்லாட்சி செய்கின்றார், சோனியா குட், மோடிஜி சூப்பர் இப்படியே பேசிகொண்டிருப்வர் ரஜினிகாந்த்

அவர் பின் வாங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை, அவர் தைரியமாக இலங்கை சென்றால்தான் ஆச்சரியம்.

என்ன கொடுமையோ தெரியவில்லை, இந்த தமிழுணர்வாளர்களின் அட்டகாசம் அதே காமெடியுடன் நடந்து கொணடே இருக்கின்றது

இனி லைக்கா நிறுவணம் கட்டிகொடுத்த வீடுகளை இடிக்க வேண்டும், அந்த மக்களை வீடில்லா அபலைகளாக நடுரோட்டில் நிறுத்த வேண்டும் என சொன்னாலும் சொல்வார்கள்.

இனி ஈழமக்கள் படகேறி வந்து இவர்களை 4 சாத்து சாத்தாவிட்டால் திருந்தமாட்டார்கள்.













 


 

No comments:

Post a Comment