சென்னையில் குடிநீர் பஞ்சம் தொடங்கிவிட்டது என்கின்றன செய்திகள், அதோடு சில சர்ச்சைகளும் வருகின்றன
அதாவது கடந்தவெள்ளத்தில் புழல் ஏரி நிரம்பியதும், பின் பராமரிப்பு சரியால்லாத அந்த ஏரியில் நீர் நிற்காமல் ஓடியதும் எல்லோருக்கும் தெரிந்தது
அதன் பின் அரசு பெரும் நிதி ஒதுக்கி அதனை பாராமரிக்க சொன்னதும் செய்திகள்
இன்று புழல் ஏரி வற்றுகின்றது, அது பராமரிக்கபட்டதாக தகவலே இல்லை, ஒதுக்கபட்ட நிதி என்னாயிற்று எனவும் தெரியவில்லை
அந்த புழல் ஏரிக்கு ஒதுக்கபட்ட நிதி மர்மத்துடனே, இப்பொழுது அதனை சுற்றி கிணறுகளில் நீர் இருக்கின்றதா என தேடுகின்றது தமிழக அரசு
புழலுக்கு ஒதுக்கிய நிதி விழலுக்கு எங்கோ பாய்ந்துவிட்டது..
இனி மழை வந்தாலும் புழலில் நீர் முழுவதும் சேமிப்பது சிரமம், காரணம் பராமரிப்பு நடைபெறவில்லை, நிதி எல்லாம் ஸ்வாஹா..
ஆக புழலில் ஊழல் நடந்திருக்கலாம் என செய்திகள் சொல்கின்றன, இது புழலுக்கு மட்டுமல்ல பெரும் ஏரிகள் நிலை எல்லாம் இதுதான் என்கின்றார்கள்
இதனை எல்லாம் எந்த ஊடகமும் எழுதாது , எந்த டிவியும் சொல்லாது
ஆனால் கலைஞர் என சொல்லுங்கள் வீராணம் ஏரி என கிளம்புவார்கள்
அதிமுக ஆட்சியில் ஏரிகள் என்னாயிற்று என்றால் சத்தமே இருக்காது
அந்த மனிதன் எது செய்தாலும் ஊழல் என குதிப்பார்கள், மற்றவர்கள் ஊழல் செய்தாலும் கம்மென்று ஒன்றுமே நடக்காதது போல இருந்துவிடுவார்கள்..
தமிழகத்தில் இப்படித்தான் பத்திரிகா தர்மம் தலைகீழாக நிற்கின்றது..
No comments:
Post a Comment