ஜூன் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தபடும் : செய்தி
சும்மாவே எகிறிகொண்டிருக்கும் விலைவாசியில் எண்ணெய் ஊற்றுகின்றார்கள், ஜூனிலிருந்து பெரும் விலைவாசி உயர்வு இருக்கலாம்
சிறு, குறு வியாபாரிகளை முன்னமே தயார்படுத்திவிட்டு வசூலிக்க ஆரம்பித்தால் சிக்கல் பெரும்பான்மையாக இருக்காது, இல்லாவிட்டால் வியாபார உலகம் பெரும் சிக்கலை சந்திக்க நேரும்
இந்த புதுவிதமான வரிவிதிப்பு அவர்களுக்கு தொடக்கத்தில் பெரும் குழப்பத்தை கொண்டுவரும் என்பது உறுதி
மக்களுக்கு இது ஒரு கசப்பான மருந்து என்றாலும், உணவு பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது , ஆனால் உணவகம் வியாபாரஸ்தலம் என்பதால் அங்கு விதிக்கபடும்
மொத்தத்தில் கூடுதல் சுமை மக்கள் சும்க்க போவது உறுதி,
கட்டுபிடியாகவில்லை எனில் வெளிநாட்டு நிறுவணங்கள் பெட்டியினை கட்டிகொண்டு கிளம்பும் ஆபத்தும் உண்டு, பார்க்கலாம்
மொத்தத்தில் ஒன்று புரிகின்றது
இந்த வரி உண்மையில் மார்ச் 1ம் தேதி விதிக்கபட்டிருக்க வேண்டும், ஆனால் 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டார்கள்
அதாவது இது விதிக்கபட்டால் பொருட்களின் விலை கூடும், அரசுக்கு கவலை இல்லை, ஆனால் வோட்டு விழாது அல்லவா?
இப்பொழுது தேர்தல் முடிந்து வெற்றியும் பெற்றாயிற்று, இனி போட்டு அடிக்கலாம்
இதனை அறிவித்தால் வோட்டு விழாது என அஞ்சி ஜூன் மாதத்திற்கு மாற்றியிருக்கின்றார்கள் என்றால் , அதன் பாதிப்பினை உணர்ந்துகொள்வது சிரமம் அல்ல..
இந்த அரசின் எல்லா தேர்தல் வெற்றிக்கு பின்னும் மக்களுக்கு ஒரு அடி விழுந்துகொண்டே இருக்கின்றது,
ஜூன் 1ல் இருந்து விலைவாசி எகிறபோவது நிச்சயம், சுமை மக்களுக்குத்தான்
அவர்களுக்கென்ன? சமீபத்தில் வரகூடிய தேர்தல் எதுவுமே இல்லை, அதனால் நிச்சயம் கண்டுகொள்ளமாட்டார்கள்..
இது அமலுக்கு வரும்பொழுது மோடி அமெரிக்கா செல்லபோகின்றாராம், மறுபடியும் உலக பயணம் தொடங்கிவிட்டார்
மனிதர் ஏதோ திட்டத்தோடு ஜூன்மாதம் கிளம்புவது போல் தெரிகின்றது...
No comments:
Post a Comment