Friday, March 31, 2017

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையில் திடீர் குழப்பங்கள் ..

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையில் திடீர் குழப்பஙகள் ஏற்பட்டது பலருக்கு ஆச்சரியம்.


பெரும் கட்சியில் சண்டைவந்தால் அது வியப்பல்ல, ஆனா கருணாசுக்கு ஒரு கட்சி இருப்பதே பெரும் விஷயம், அதில் 4 பேர் இருப்பது அடுத்த ஆச்சரியம், அதில் கருணாஸ் சிலரை நீக்குவதும், அவர்கள் இவரை நீக்குவதும் பெரும் ஆச்சரியம்


அப்படி என்ன நடந்தது?




ஒன்றுமில்லை கூவத்தூர் பொற்காலங்களில் சுமார் 5 கோடி வரை கருணாஸ் அடித்துவிட்டார் என்ற செய்தி வந்தது, அவர் கடனை எல்லாம் அவர் அடைத்தத செய்தி கசிந்தது


நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாயும் பொழுது, ஒட்டுபுல்லுக்கு 2 சொட்டாவது பாயவேண்டும் அல்லவா? அதுதானே கட்சி தர்மம்?


அதுவும் கிடைக்காவிட்டால் எப்படி?


முக்குலத்தோர் புலிப்படை இப்படித்தான் கருணாசை விரட்டியதாக சில செய்திகள் வருகின்றன, கருணாஸ் மறுத்திருக்கின்றார்


கருணாசுக்கே 5 கோடி என்றால்.....


"நான் ஆணையிட்டால்...இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்" என ராமசந்திரன் பாடியதிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது



No comments:

Post a Comment