கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையில் திடீர் குழப்பஙகள் ஏற்பட்டது பலருக்கு ஆச்சரியம்.
பெரும் கட்சியில் சண்டைவந்தால் அது வியப்பல்ல, ஆனா கருணாசுக்கு ஒரு கட்சி இருப்பதே பெரும் விஷயம், அதில் 4 பேர் இருப்பது அடுத்த ஆச்சரியம், அதில் கருணாஸ் சிலரை நீக்குவதும், அவர்கள் இவரை நீக்குவதும் பெரும் ஆச்சரியம்
அப்படி என்ன நடந்தது?
ஒன்றுமில்லை கூவத்தூர் பொற்காலங்களில் சுமார் 5 கோடி வரை கருணாஸ் அடித்துவிட்டார் என்ற செய்தி வந்தது, அவர் கடனை எல்லாம் அவர் அடைத்தத செய்தி கசிந்தது
நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாயும் பொழுது, ஒட்டுபுல்லுக்கு 2 சொட்டாவது பாயவேண்டும் அல்லவா? அதுதானே கட்சி தர்மம்?
அதுவும் கிடைக்காவிட்டால் எப்படி?
முக்குலத்தோர் புலிப்படை இப்படித்தான் கருணாசை விரட்டியதாக சில செய்திகள் வருகின்றன, கருணாஸ் மறுத்திருக்கின்றார்
கருணாசுக்கே 5 கோடி என்றால்.....
"நான் ஆணையிட்டால்...இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்" என ராமசந்திரன் பாடியதிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது
No comments:
Post a Comment