இரட்டைஇலை சின்னத்தை எனக்கே சொந்தம், காரணம் நான் ஜெயாவின் வாரிசு; தீபா
பன்னீரும், சசிகலாவும் அதற்குத்தான் மல்லுகட்டுகின்றார்கள், ஆளுக்கொரு இலை கொடுத்தாலும் அதில் இருப்பதோ இரு இலைதான்
என்ன செய்யலாம், இலையினை பிய்த்தபின் வெறும் கம்பு இருக்குமல்லவா? அது வேண்டுமானால் தீபாவிற்கு கிடைக்கலாம்
அத்தை வீடு வேண்டாம், அரண்மனை வேண்டாம், தோட்டம் வேண்டாம், சமாதி கூட வேண்டாம்
ஆனால் அத்தை கட்சியின் சின்னம் மட்டும் வாரிசுபடி இவருக்கு வேண்டும்
சென்னை துறைமுகத்தில் கண்டெய்னரில் வந்த பணம் பற்றிய செய்திகள் என்ன ஆனது?
அது கள்ளநோட்டு என்றால் அனுப்பியது யார்? யாருக்கு அனுப்பினார்கள்?
நல்லநோட்டு என்றாலும் அது யாருக்கு சொந்தமான பணம்?
இதை எல்லாம் மறைத்து இளையராஜா, அமரன், பாலசுப்பிரமணியம், தீபா , அவரின் கணவன், இரட்டை இலை யாருக்கு என தலைப்பு செய்திகள் பத்திரிகைகளால் சொல்லபடுகின்றன
இனி அந்த பணம் பற்றிய மர்மம் வெளிவரும்?
தமிழக அரசுக்கு 4 லட்சம் கோடி கடனாம், ஆனால் தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் கண்டெய்னர் எல்லாம் பணமாம்
சேகர் ரெட்டி முதல் திருப்பூர் குடோன் வரை பணமாம்..
எப்படி சாத்தியம்?
ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது, இதுதான் தமிழகம்.
No comments:
Post a Comment