Saturday, March 25, 2017

நெல்லையில் நகை கடையில் தங்கம் கொள்ளை

நெல்லையில் நகை கடையில் தங்கம் கொள்ளை போயிருக்கின்றது, ஆனால் வேலுர் பக்கம் தமிழக பொலீஸ் மீட்டுவிட்டது, தன் திறமையினை போலீஸ் நிலைநாட்டிற்று


இப்பொழுது சிக்கல் என்னவென்றால் ஒரு பத்திர்கை 40 கிலோ எனவும், இன்னொரு பத்திரிகை 37.5 கிலோ எனவும் , இன்னொரு பத்திரிகை 60 கிலொ எனவும் எழுதுகின்றன‌


ஆக கடையில் இருந்த மொத்த தங்கத்தின் அளவு என்ன என்பதே தெரியவில்லை, என் தெரியவில்லை? என கேட்க கூடாது




ஏதோ ஒரு படத்தில், எம்.ஆர் ராதா வீட்டில் களவு போயிருக்கும் அவர் போலிசிடம் சொல்வார் " எவ்வளவு கொள்ளை போச்சிணு நீங்க கேட்க கூடாது


களவு போச்சி..நீங்க கண்டுபிடிச்சி குடுக்கணும், அவ்வளவுதான் உங்க வேல...


சும்மா வருமானவரி அதிகாரி மாதிரி கேட்க கூடாது, அதுக்கு வேற டிப்பார்ட்மெண்ட் இருக்கு, சொல்ல வேண்டியதெல்லாம் அவங்க கிட்டதான் சொல்லமுடியும்.


இப்போ ஓடிபோய் களவுபோனத கண்டுபிடிச்சி என் கையில கொடுத்துருங்க, கவர்மெண்ட்ல வாங்குற பணத்துக்கு என்ன மாதிரி பொது மக்களுக்கு சேவை செய்ங்க"



No comments:

Post a Comment