உலகெல்லாம் வாழும் ஈழதமிழர்கள் விடுத்திருக்கும் அறிவிப்பு இது
"தமிழகத்தில் திருமுருகன் காந்தி என்பவர் தன் மே 17 இயக்கத்தின் மூலம், திடீரென அமெரிக்க நிறுவணங்களை அடிப்பேன் என்றும், தூதரகத்தை கண்டிப்பேன் என்றும் தமிழகத்தில் கிளம்பியிருக்கின்றார்
பிரிட்டன் உட்பட மற்ற நாடுகளின் நிறுவணங்கள், தூதரகத்தையும் தமிழ்நாட்டில் அவர் கண்டித்து நொறுக்க போகின்றாராம்
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஈழத்தமிழர்கள் பால் மாற்றாத மட்டில் தமிழர் சார்பாக எந்த மாற்றமும் ஐ.நாவில் ஏற்படப்போவதில்லை
அந்நாடுகளை மேலும் விரோதி ஆக்கினால் ஈழதமிழருக்கு ஒரு நன்மையும் விளையபோவதில்லை..
ஈழத்தமிழர்களின் பெயரால் மற்றவர்களின் உடைமைகளை சேதப் படுத்துவதையோ மற்றைய நாட்டவர்களை புண்படுத்துவதையோ ஈழத்தமிழர்கள் பால் போராடுவதாகச் சொல்லும் தமிழக அமைப்புக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவரின் இந்த செயல் தமிழர்களின் கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்சசையை மேலும் சிக்கலாக்கும், உலகெல்லாம் ஈழ தமிழருக்கு பெரும் சிக்கலை இவர் ஏற்படுத்துகின்றார் இவர்.
தமிழக மக்களும் தமிழகப்போராட்ட அமைப்புக்களும் மே பதினேழு இயக்கம் ஒழுங்கு செய்துள்ள இம் முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காது விலகியிருக்குமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த திருமுருகன் காந்தி என்பவர் ஈழமக்களுக்கு எதிரான காரியங்களையே செய்கின்றார்"
ஆக திருட்டு திருமுருகன் காந்தி என்பவர் , வாயினை மூடிகொண்டு இருக்குமாறு உலகெல்லாம் வாழும் ஈழ தமிழர்களே சொல்லியாகிவிட்டது,
ஈழதமிழர்களே சொல்லிவிட்ட பின், இங்கிருக்கும் தமிழர்கள் சிந்திப்பது நல்லது.
இதற்கு மேலும் திருமுருகன் காந்தி கத்துவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?,
அவர் அந்த இயக்கத்தை கலைத்துவிட்டு தியானம் செய்வது நல்லது .
No comments:
Post a Comment