நேரம் வரும்பொழுது உங்களை சந்திக்கின்றேன் : இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி செய்தி
சந்திக்கவே மாட்டேன் என்னை விட்டு விடுங்கள் என இதற்கு பொருள், அதாவது முன்பு இப்படித்தான் நேரம் வந்தால் அரசியலுக்கு வருவேன் என சொல்லிகொண்டே இருந்தார்
அவரை பொருத்தவரை வரமாட்டேன் என்பதை "நேரம் வரும்பொழுது.." என சொல்லிகொள்வார்.
ஆனால் சிலருக்கு "நேரம் கூடி" வந்துவிட்டது
வேல்முருகன் மீது 10 கோடி ரூபாய் அபராதம் கேட்டு லைக்கா நிறுவணம் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றது
அவரோ உடனே முத்தரசன், திருமாவுடன் "கூடி", பெரும் அறிக்கை எல்லாம் தெரிவிக்கின்றார், ஒருவேளை 10 கோடி கட்டவேண்டிய நிலை வந்தால் மூன்றில் ஒருபங்காக குறையும் அல்லவா?
பொதுவாக அங்கிள் சைமன் சினிமாக்காரர்கள் பற்றி வாய்திறக்கமாட்டார், அதுவும் பாஜக அபிமானம் பெற்றோர் பற்றியெல்லாம் சீமானுக்கு வாய் வராது
எங்கே தன்னை இழுத்துவிடுவார்களோ என யோசித்து, அந்த வீடியோவிற்கு விழுந்து விழுந்து விளக்கம் அளிக்கின்றார்
வைகோ வேறுமாதிரி லைக்காவால் கையாளபடுபவர்,
சீமானையும், வைகோவையும் ஐரோப்பா ஈழ தமிழர்கள் மூலம் கையாள்வது லைக்காவின் சுபாஷ்கரனுக்கு மிக எளிதான வேலை..
ஆக இப்பொழுது சிக்கியிருப்பது திருமாவும், வேல்முருகனும், முத்தரசனும்
இவர்கள் மூவருக்கும் "நேரம் கூடி" வந்துவிட்டது தெரிகின்றது.
No comments:
Post a Comment