உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசிமூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டிரம்பின் நிலை அந்தோ பரிதாபம், ஊருக்குள் தலைகாட்ட முடியவில்லை, எங்கும் எதிர்ப்பு, கண்டன ஊர்வலம்.
எவ்வளவு திட்டங்களை(!) சொன்னாலும் சபையில் திருப்பி அவர் முகத்தில் எறிந்துவிடுகின்றார்கள்.
சரி வெளிநாட்டுக்கு செல்லலாம் என்றால் எந்த நாடும் வரவேற்க தயாரில்லை, அமெரிக்க அடியாட்களில் ஒன்றான பிரிட்டன் வர கூட கடும் எதிர்ப்பு
ஜெருசலேம் தூதரகம் என அவர் அறிவித்ததற்கு பிரான்ஸ் கூட திட்டிவிட்டது.
சீனா பக்கம், அதன் கூட்டாளிகள் பக்கம் செல்லவே முடியாது..
இஸ்லாமிய நாடுகள் கடும் கோபத்தில் இருக்கின்றன
மனிதர் நொந்து போய்விட்டார், இந்நிலையில்தான் மோடி ஜூன்மாதம் அமெரிக்கா செல்ல இருக்கின்றார்
அப்படி தன்னை பார்க்கவும் ஒரு பெரும் நாட்டின் பிரதமர் வருகின்றார் எனும் சந்தோஷத்தில் கண்களை துடைத்துகொண்டார் டிரம்ப்
தான் ஒரு நாடு கூட செல்லமுடியாத நிலையில் இருக்க, இந்த மோடி எப்படி எல்லா நாட்டிற்கும் செல்கின்றார் எனும் ஆச்சர்ய பொறாமையும் டிரம்பிற்கு இருக்கலாம்
யாரும் அழைத்து பேசாத நிலையில் தனிமைபட்ட டிரம்ப், போனில் அழைத்து மோடியிடம் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார், அவ்வளவுதான் சொல்லமுடியும், அமெரிக்க ஜனாதிபதி அழவா முடியும்?
அப்படி வாழ்த்திய டிரம்பிடம் அமெரிக்காவில் இந்தியர்கள் கொல்லபடுவது பற்றி மோடி ஏதும் கண்டித்தாரா? என நாம் கேட்க கூடாது..
பாகிஸ்தான் சுட்டால்தான் மோடி கொந்தளிப்பார், சிங்களனோ அமெரிக்கனோ இந்தியர்களை சுட்டால் கண்டுகொள்ளமாட்டார், இது வேறு விஷயம்..
அது இருக்கட்டும், இன்னும் டிரம்ப் என்ன பாடெல்லாம் பட போகின்றாரோ?....
போகிற போக்கினை பார்த்தால் டிரம்ப் நமது தமிழிசைக்கு கூட போன் செய்யும் காலம் வந்துவிடும் போலிருக்கின்றது..
No comments:
Post a Comment